Thursday, April 07, 2011

ஜெயாவின் தோல்விக்கு காரணம் என்ன?

ஜெயாவின் தோல்விக்கு காரணம் என்ன?

மே 14 , 2011 இந்த வரலாற்று சிறப்பு மிக்க தமிழக தேர்தல் களம் பல சுவையான சம்பவங்களை உள் அடக்கியது. அதிமுகவின் தலைவி ஜெ ஏன் இந்த தேர்தலி தோல்வியுற்றார் என்ற காரணத்தை எழுத வேண்டும் என்று தோணியது. இவை அனைத்தும் பல பத்திரிக்கைகளில் படித்து இருந்தாலும், தொகுத்து என் பதிவில் இட விரும்பினேன்.

இந்த களத்தில் முத்தமிழ் அறிஞர் தமிழக முதல்வர் கலைஞரை விரட்டி அடிக்க ஆசைப்பட்ட ஜெ, முதல் தவறாக தனது சக கூட்டணி தலைவர்களிடம் பேசாமல், தமிழக தொகுதிகளை அவர் விருப்பபடி பிரித்து கொடுக்காமல் 160 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் என தன் இச்சையாக அறித்தது முதல் தவறு. இங்குதான் தமிழக தேர்தல் பரபரப்பின் ஆரம்ப கட்டம்!!!

அடுத்த மாபெரும் துரோகம், நம் தொப்புள் கொடி உறவுள்ள ஈழ மக்களை தொடர்ந்து எந்த சுயநலமும் இல்லாமல் ஆதரித்து வரும் அண்ணன் வைகோவை அதிமுக கூட்டணியில் இருந்து நாகரீகம் இல்லாமால் பிரிந்து, தூக்கி எறிந்தது. இங்குதான் ஜெவின் உண்மையான முகம் மீண்டும் ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் தெரிய வந்தது. உலகெங்கும் வாழும் தமிழ் உணர்வாளர்கள் அய்யோ வைகோவிற்கு இப்படி ஆயிற்றே என்று மிக மிக வருத்தப்பட்டார்கள். மதிமுக தொண்டர்கள் (முன்னாள் திமுக) நொந்து நூலாகி, ஜெவிற்கு பாடம் புகட்ட மீண்டும் திமுகவிற்கு தங்கள் வாக்குகளை தந்தார்கள். இந்த தேர்தலில் அவர்களின் வாக்கிற்கு ஒரு முக்கியத்துவம் உள்ளது என்பதை தமிழக பார்வையாளர்களுக்கு உணர்த்தினார்கள்!!!

அடுத்த தவறு – கொங்கு முன்னேற்ற கூட்டணியை முறையாக பேசி அவர்கள் 6 இடங்கள் கொடுத்து இருந்தாலே அவர்கள் அதிமுக பக்கம் வந்து இருப்பார்கள். கடைசிவரை செங்கோட்டையன் அவர்களிடம் பேசி ஜெவை சந்திக்க விடவில்லை. அவர்களும் நொந்து நூலாகி போன நேரத்தில் முன்னாள் அதிமுக மாவட்ட செயலாளர், அமைச்சர் ஈரோடு முத்துசாமி கொங்கு குழுவை கலைஞரிடம் சேர்த்து ஒரு சீட்டு கூடுதலாக கொடுத்து திமுகவுடன் இணைய வைத்தார். இதுவும் அதிமுகவிற்கு எதிராக போய்விட்டது. முத்துசாமியும், சின்னசாமியும் கவுண்டர் சமூகத்தில் மிகுந்த செல்வாக்கு பெற்றவர்கள். அவர்கள் அதிமுகவின் விசுவாசிகள், அவர்களை அதிமுக தலைமை மதிக்காமல் நடந்துக் கொண்டது. அவர்கள் இன்று திமுக பக்கம்!!! இதுப்போல அனிதா ராதாகிருஷ்ணனும் மற்றும் சேகர் பாபுவும் அடக்கம். இதனை விரிவாக எழுத ஆரம்பித்தால் இந்த பட்டியல் நீண்டு கொண்டு போகும்..!!!

அடுத்து தவறு, சரத் குமார் நாடார்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து “காமராசர்” பேரில் ஒரு அமைப்பு ஆரம்பித்தார். பிரிந்து கிடந்த பல நாடர் அமைப்புகள் ஒன்று சேர்ந்து ஒரு வலுவான அமைப்பாக கூடி வந்த நேரம். அன்று மாலையே சரத் தனியாக சென்று ஜெவை பார்த்து வெறும் இரண்டு சீட் வாங்கி வந்த பொழுது “புது காமராசர் அமைப்பு” அன்று மாலையே சரத் குமாரை கட்சி விட்டு நீக்கியது! ஜெ சர்த்குமாரிடம் நீங்கள் அனைவரும் ஒன்றாக வரவும் என்று சொல்லி இன்னும் ஒன்று இரண்டு சேர்த்து கொடுத்து இருந்தால், ஒட்டு மொத்த நாடார் ஓட்டுகளும் அதிமுகவிற்கு கிடைத்து இருக்கும்!!! தற்பொழுது பல வலுவான நாடார் அமைப்புகள் திமுக பக்கம்!

வட மாவட்டங்களில் மிக மிக வலுவாக இருக்கும் அய்யா இராமதாசு மற்றும் அண்ணன் தொல் திருமாவளனும் மீண்டும் சேர, அய்யா இராம்தாசை நீதிமன்றத்திற்கு இழுத்து அவரை அவமான படுத்தி அவரை திமுக பக்கம் அனுப்பிய பெருமை ஜெ வை சாரும்!!! தாழ்த்தப்பட்ட சமூகத்திற்கு போராடி வரும் மருத்துவர் கிருஷ்ணசாமிக்கும், மூவேந்தர் முன்னேற்ற முண்ணனிக்கு மேலும் சில சீட்டுகள் ஒதுக்கி இருக்கலாம். மற்றொரு மூவேந்தர் தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் தற்பொழுது திமுக பக்கம்! ஒரு காலத்தில் இவர் சசிகலாவின் தோஸ்து!!!

அடுத்த தவறு கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவருடனும் ஒரு புகைப் படம் எடுத்து, அவர்களோடு ஒற்றுமையாக மிகப் பெரும் பிரச்சார பொதுகூட்டம் சென்னையிலேயே தொடங்கி நல்ல ஆரம்பமாக இல்லாமல் சொதப்பியது!

மிகப் பெரும் தவறாக திமுகவின் தேர்தல் அறிக்கையை அப்படியே காப்பி அடித்தது! சென்ற தேர்தலில் திமுக இதுப் பொன்ற இலவசங்களை தரமுடியாது என்று சொல்லிவிட்டு, இந்த தேர்தலில் நானும் தருவேன் என்று சொதப்பியது!!!

அடுத்த தவறு, சொந்த சாதிப் பற்றின் காரணமாக “ஸ்ரீரங்கத்தில்” தேர்தலில் போட்டியிட்டது, அதற்கு காரணம் ஜோசியம் வேறு! சென்னை அதிமுக கோட்டை என்று கூறும் ஜெ “மயிலாப்பூரில்” நின்று இருக்கலாமே!!! மீண்டும் ஏதாவது கிராமத்தில் நின்று ஜெ சாதிக்கு அப்பாற்பட்டவர் என்று காண்பிக்க தவறிவிட்டார்!!!

கடைசியாக ஜெ பிரச்சாரத்தில் மிக மிக செயற்கையாக “திட்டங்கள் நடத்தி தரப் படும்”, திட்டங்கள் தொடங்கப் படும், பரசீலிக்க படும்” பேசியது. சுவையாக, மக்கள் மனதை கவரும் வண்ணம் எந்த கூட்டத்திலும் பேசாமல் இருந்தது! வழக்கம் போல் இந்த தேர்தலிலும் வேட்பாளர்களை தன் அருகே நிற்க விடாமல் அருகில் உள்ள வாகனத்தில் நிற்க வைத்துவிட்டு, ஜெ அவருடைய வாகனத்தில் ஒரு கூண்டுக்குள் இருந்து பிரச்சாரம் செய்தது!

மே 14 அன்று மாலை கலைஞர் மீண்டும் ஆறாவது முறையாக ஆட்சி அமைக்க உள்ளார் என்று செய்தியை பார்த்தவுடன் இந்த பதிவை இடலாம் என்று இருந்தேன், ஆனால் என் சகோதரர் ஏன் எழுதவில்லை என்று கேட்டுக் கொண்டே இருப்பார், அதன் விளைவே இந்த பதிவு.

அப்பாடா தமிழக சட்டமன்ற தேர்தலை பற்றி நாமும் எழுதியாகிவிட்டது!!!

நன்றி
மயிலாடுதுறை சிவா..

குறிப்பு : மே ௧௬ஜெயலலிதா கொடநாடு புறப்பட்டு சென்றார், அவரை சமாதன படுத்த விஜய்காந்த், நல்ல கண்ணு, கிருஷ்ணசாமி, கொடுநாடு சென்று அடுத்த நாடாளுமன்ற தேர்தல் பற்றி பேச சென்றார்கள், ஜெ யாரையும் சந்திக்கவில்லை. அவர்கள் மாலை வரை அங்கேயே இருந்து மிகுந்த ஏமாற்றத்துடன் சென்னை திரும்பினார்கள்...

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

2 Comments:

Blogger Robin said...

இப்படிகூட நடக்கலாம்.

Thursday, April 07, 2011 8:17:00 PM  
Blogger bandhu said...

கலாம் அவர்களின் சொல்படி நடக்கும் உண்மை தொண்டர் நீங்கள். அவர்தானே சொன்னார், கனவு காணுங்கள் என்று!

Thursday, April 07, 2011 8:27:00 PM  

Post a Comment

<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது