Thursday, September 09, 2010

வாசிங்டன்னில் தந்தை பெரியாரின் 132வது பிறந்தத் தின விழா.


வாசிங்டன்னில் தந்தை பெரியாரின் 132வது பிறந்தத் தின விழா
பகலவன் தந்தை பெரியாரின் பிறந்த தினம் ஒவ்வோரு ஆண்டும் வாசிங்டன் வட்டாரத்தில் எளிமையாக ஆனால் சிறப்பான பேச்சுகள், உரையாடல்கள் மூலம் நடைப் பெறும்.

அதைப் போலவே இந்த ஆண்டும் தந்தை பெரியாரின் 132வது பிறந்தத் தின விழா செப்டம்பர் மாதம் 18ந் தேதி சனிமாலை 5.30 மணி முதல் 9.30 மணிவரை, எலிகாட் சிட்டி நகரத்தில், மேரிலாந்தில். (Terra Maria Community Center, 3112 Josephine Walk, Ellicott City, MD) நடைபெற உள்ளது.

இந்த விழாவின் சிறப்பு அம்சம் என்னவென்றால் மிகச் சிறந்த பகுத்தறிவாதி, தத்துவ பேராசிரியர் Paul Kurtz பேச உள்ளார்.( http://en.wikipedia.org/wiki/Paul_Kurtz). இவரை ”மதச்சார்பற்ற மனிதாபிமான தந்தை” என்றும் சொல்வார்கள்.

அவரை தொடர்ந்து ”பகவத் கீதையின் உண்மைகள்” என்ற புத்தகத்தின் ஆசிரியர் Narla Venkateswara Rao பற்றியும் அவரின் இந்த புத்தகத்தை பற்றியும் மருத்துவர் சிந்தானந்தன் பேச உள்ளார். (http://en.wikipedia.org/wiki/Narla_Venkateswara_Rao) .
“அந்த கால தமிழ்ச் சமுதாயமும், மதசார்பற்ற மனிதாபிமானமும்” என்ற தலைப்பில் முனைவர் இர பிரபாகரன் பேச உள்ளார்.

விழாவிற்கு அமெரிக்கா வாழ் தமிழர்கள் கலந்து கொண்டு தந்தை பெரியாரின் தன்னலமற்ற தமிழ் சமுதாயம் முன்னேற தொடர்ந்து பாடுபட்ட வரலாற்றை பெரியாரின் கொள்கைகளை உள்வாங்கி கொண்ட பகுத்தறிவாளர்களின் பேச்சுகளை கேட்டு உங்கள் சிந்தனையை வளப் படுத்துங்கள்.

நன்றி
மயிலாடுதுறை சிவா...
பெரியார் பன்னாட்டு மையம்.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

0 Comments:

Post a Comment

<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது