Thursday, August 09, 2007

இனமுரசு சதய்ராஜ்க்கு - தந்தை பெரியாரின் மோதிரம்

சென்னையில் இன்று "பெரியாரின் 100வது நாள்" வெற்றி விழா சீரும் சிறப்புமாக கலைவாணர் அரங்கில் நடைப் பெற்றது. விழாவிற்கு தமிழக முதல்வர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் கலந்துக் கொண்டு பெரியார் படத்தில் நடித்த மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களுக்கு விருது வழங்கி
மிக அருமையாக பேசினார். விழாவிற்கு திராவிட கழக தலைவர் ஆசிரியர் வீரமணி தலமை தாங்கி அவரும் பெரியாரின் கருத்து இந்நாட்டிற்கு எப்பொழுதும் தேவை என்று உரையாற்றினார்.

இந்த விழாவில் என் மனதை மிகவும் கவர்ந்த விசயம் தந்தை பெரியார் அணிந்து இருந்த பச்சைகல் மோதிரம் இனமுரசு சத்யராசுக்கு வழங்கப் பட்டது. இது சம்பந்தமாக இன்றைய விடுதலைப் பத்திரிக்கையில் முழு விவரம் வெளியாகி உள்ளது.


Free Image Hosting at <a href=www.ImageShack.us" />

திரைத் துறையில் சத்யராஜ் மிக மிக யாதார்த்த மனிதர். எதையும் வெளிபடையாக பேசுபவர். எந்த வித அச்சமோ கூச்சமோ இல்லாமல் கருப்புச் சட்டை அணிந்து தந்தை பெரியார் கருத்துகளை பேசுபவர். 3 ஆண்டுகளுக்கு முன்பு வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையில் கலந்துக் கொண்ட பொழுது, ஈழத் தமிழர்களின் படும் அவலத்திற்கு வருத்தம் தெரிவித்துவிட்டு, எனக்கு அடுத்தப் பிறவியில் நம்பிக்கை இல்லை, ஆனால் அடுத்தப் பிறவி என்று ஓன்று இருந்தால் "ஈழத்தில்" பிறக்க விரும்புகிறேன் என்றார்.

பெரியாரின் சீடர், கடவுள் மறுப்பாளர், பகுத்தறிவாளர், ஈழ் மக்களின் விடுதலையை மிகவும் விரும்புவர், நம் தமிழ்நாட்டு நடிகர் சதய்ராஜுக்கு மனதார வாழ்த்துகள் பல. இதுப் போல் கொள்கை பிடிப்புள்ள
நடிகர்கள் பலர் நம் தமிழ்திரை உலகிற்க்கு தேவை!!!

நன்றி

மயிலாடுதுறை சிவா...



Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

3 Comments:

Blogger சிவபாலன் said...

பதிவுக்கு மிக்க நன்றி!

பெரியார் படத்தில் பணி ஆற்றிய அனைவருக்கும் நன்றியும் பாராட்டும்.

இந்த விழாவில் கலைஞரின் உரை எழுச்சியூட்டும் வகையில் உள்ளது.

நானும் ஒரு பதிவிட்டிருக்கிறேன். சுட்டி கிழே..

நன்றி

http://sivabalanblog.blogspot.com/2007/08/blog-post_09.html

Thursday, August 09, 2007 1:26:00 PM  
Blogger வெற்றி said...

சிவா,
பதிவுக்கு மிக்க நன்றி.

Thursday, August 09, 2007 1:27:00 PM  
Blogger Unknown said...

Siva!!!

SathyaRaj miha nalla nadigar enbhathil sandhegam illai..Aanal indha padathin moolam kidaitha narpeyarai avar thakka vaithukolla vendum....Meendum NAMITHA vudan kuthaatam podamal irukka naan kadavulai illai iyarkayai vendukiren..:) :)

Thanx :)

Thursday, August 09, 2007 2:18:00 PM  

Post a Comment

<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது