Thursday, October 16, 2008

ஈழ மக்களுக்கு ஆதரவு தெரிவித்து இராமேஸ்வரம் செல்லும் கலைஞர்களுக்கு வாழ்த்துகள்!

வாசிங்டன் 16 2008

வரும் அக்டோபர் 19ந் தேதி ஞாயிறு அன்று நடக்கவிருக்கும் பேரணி மற்றும் பொது கூட்டத்திற்கு செல்லும் அனைத்து தமிழ் உணர்வுள்ள நடிகை நடிகையர்களுக்கு மனப் பூர்வமான வாழ்த்துகளைதெரிவிப்போம்!

அதற்கான ஏற்பட்டுகளை செய்துவரும் தயாரிப்பாள சங்கத் தலைவர் இராம நாராயணன் மற்றும் இயக்குனர் பாரதிராஜாவிற்கும் உலகத் தமிழர்கள் சார்பாக வாழ்த்துகளை தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம்.

பேரணியில் கலந்து கொள்ளவிருக்கும் கலைஞர்களுக்கு தங்கும் வசதி, உணவு, பிரயாண ஏற்பாடுகள்முறையாக நடந்துவருவதும் பாராட்டுக்குரியது!
தொப்புள்கொடி உறவுள்ள நம் சகோதர சகோதிரிகள் படும் அவலுங்களுக்கும், அவர்களுக்கு நிரந்தர தீர்வை நோக்கியும் நம் என்றும் நம் ஆதரவை தெரிவிக்க கடமை பட்டுள்ளோம்!


இந்த கண்டன பேரணி கூட்டத்தில் கலந்து கொள்வது சாத்தியமா என்று நடிகர்கள் கூட்டத்தில் விவாதிக்கப் பட்டது மிக மிக வருத்தமான விசயம்! நடிகை நடிகர்கள் இதனை உணர்வு பூர்வமாகஅணுகாமல், இவர்கள் ஏதோ வேற்று கிரகவாசிகள் போல் நடந்து கொள்வது கண்டிக்க தக்கது!

நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் - ஈழ மக்களுக்கு என்றுமே ஆதரவானவர். அவர் தலைமை பதவியில் இருப்பவர். சக கலைஞர்களை அவர் இராமேஸ்வரம் சென்று வர அவர் கட்டளை இட்டு இருக்க வேண்டும்! இவர்கள் தனியாக நவம்பர் 1ந் தேதி மற்றொரு உண்ணாவிரதம் அறிவித்து இருப்பது தேவையில்லாத ஒன்று! இராமேஸ்வரம் செல்லும் நடிகர்கள் மற்றும் நடிகைகள் அனைவரும் தமிழ் உணர்வாளர்கள் போலும், போகாதவர்கள் உணர்வாளர்கள் இல்லை என்ற ஓர் தோற்றம் ஏற்பட்டுவிடும்!வேண்டாம் இந்த குழப்பம்!

தமிழர்களின் ஒற்றுமையே ஈழ மக்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி! பொதுவான பிரச்சினைகளில் நாம் ஒற்றுமையாக இருப்பது எதிரிகளுக்கு அதிர்ச்சியாக இருக்க வேண்டும்!

ஈழ மக்கள் பிரச்சினைகளில் தொடந்து குரல் கொடுத்துவரும் இயக்குனர் பாரதிராஜா மற்றும் சககலைஞர்கள் அனைவருக்கும் உலகத் தமிழர்கள் சார்பில் பாராட்டுகள் பல....

நன்றி
மயிலாடுதுறை சிவா...

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

0 Comments:

Post a Comment

<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது