Monday, October 02, 2006

பாட்டி, தாத்தாவிற்கு சமர்பணம்.

ரொம்ப நாளாகவே தாத்தா பாட்டியைப் பற்றி ஓர் பதிவு போட வேண்டும் ஓர் ஆசை.

இந்த பதிவு ஓவ்வோரு பேரனுக்கும் பேத்திக்கும் பிரதி உபகாரம் எதிர் பாரமால் உதவிசெய்யும் தாத்தா பாட்டிக்கு சமர்பணம்.

இது ஓர் உண்மை சம்பவம்....

நான் அமெரிக்கா வந்து கிட்டதட்ட 8 ஆண்டுகள் ஆகிவிட்டன. காலப் போக்கில்நிறைய தமிழ் குடும்பங்களுடன் பழகும் வாய்ப்பு ஏற்பட்டது. தமிழ் நாட்டில் இருந்துவந்து இங்கு வந்து படிக்கவோ அல்லது வேலைக்கு செல்லவோ வந்து இருக்கும்பலருக்கு இங்குள்ள தமிழ் நண்பர்கள் பலரே நமது குடும்பங்கள், உறவினர்கள், சகோதர சகோதிரிகள். காலப் போக்கில் நமது குடும்பத்தில் அக்கறையோடு பழகும்நண்பர்கள் நிச்சயம் கிடைக்கும். அந்த குடும்ப நண்பர்களோடு கொஞ்ச கொஞ்சமாகநமது குடும்ப விசயங்கள், பொருளாதார சூழ்நிலைகள், பங்காளி சண்டைகள், எதிர்கால திட்டங்கள் இப்படி பலவற்றை பேச நமக்கு சந்தர்பம் கிடைக்கும், அதுவேமிகப் பெரிய ஆறுதலும் கூட. பல சமயங்களில் அரசியல் கருத்து வேறுபாடுகள்,கருத்து மோதல்களும் ஏற்படும். பிறகு மீண்டும் அவர்களோடு நாம் சில அல்லது பலவற்றை பேச ஆரம்பித்து விடுவோம். நமக்கும் அவர்களை விட்டால் வேறு வழியில்லை, அவர்களுக்கும் நம்மைவிட்டால் வேறு வழியில்லை கதைதான்.

இப்பொழுது கதைக்கு வருகிறேன்...

எனக்கு ஓர் குடும்ப நண்பர் இருக்கிறார். அவர் வேதியில் துறையில் முனைவர் பட்டம்பெற்றவர். கோவை அருகில் உள்ள கோத்தகிரி சொந்த ஊர். காலப் போக்கில் அவரும்அமெரிக்கா வந்து விட, கணணித் துறையில் நன்கு படித்து, கடின உழைப்போடு நல்லவேலையில் இருகிறார். அவருக்கு குடும்ப பாசம் மிக அதிகம். அவருக்கு அப்படிதானாஅல்லது "படுகா இனத்தை" சேர்ந்த அனைவரும் அப்படியா என்ற சந்தேகம் எப்பொழுதும் உண்டு.

அவருக்கு இரண்டு அண்ணன் ஓரு தம்பி ஓர் தங்கை. எல்லோரும் திருமணம் ஆகி நல்ல நிலைமையில் உள்ளவர்கள். ஓர் அண்ணன் மருத்துவர், அண்ணியும் மருத்துவர். அண்ணன்சென்னையில் படித்துவிட்டு அங்கேயே பிரபல மருத்துவரிடமும், பிரபல மருத்துவ மனையிலும்வேலைப் பார்த்துவிட்டு 6 ஆண்டுகளுக்கு முன்பு பகாமாஸ் என்ற தீவிற்கு வேலைக்கு வந்துவிட்டனர். அண்ணிக்கும் அதே மருத்துவ மனையில் வேலை. மிக பரபரப்பான சென்னையில்இருந்துவிட்டு பகாமாஸ் வந்து இருந்தது மிக பெரிய ஆறுதலாகவும் நல்ல வேலையில்இருப்பதாலும் அமைதியாக வாழ்க்கையை தொடர ஆரம்பித்தனர்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எல்லோர் வாழ்க்கையிலும் வர கூடிய பிரச்சினை தலை எடுத்தது.அதாவது அவர்கள் பையன் 10 வகுப்பில் இருந்து 11 வகுப்பு செல்ல ஆரம்பித்த காலம். மிக நன்றாக படிக்க கூடிய ஆர்வம் உள்ள மாணவன் அவர்களது மகன். இவர்களுக்கு தன்னுடையமகனை எப்படியாவது மருத்துவ படிப்பு கிடைத்து விடாதா என்ற ஏக்கம், மிக நியாயமான கனவும் கூட.

இவர்களோ பணி நிமித்தம் காரணமாக பகாமாஸில். மகனோ கோவையில். என்ன செய்வது? தாயுக்கும் தந்தைக்கும் மகனை அருகில் இருந்து நன்கு கவனித்து கொண்டு அவனை எதிர்காலகனவுகளில் அவனை முறையான பாதையில் செலுத்த வேண்டும் என்ற மனப் போராட்டம்.

இங்குதான் நம் கதாநாயகி, பாட்டியும் கதாநாயகர் தாத்தாவும் முன் வந்தார்கள் இவர்கள்பிரச்சினையை அவர்கள் முடித்து வைக்க. இந்த பாட்டி தாத்தா அம்மாவிம் அப்பா அம்மா.

பேரன் ராசிபுரத்தில் உள்ள பிரபல பள்ளியில் 11 வகுப்பை தொடர்ந்தான். தாத்தாவிற்கு வயது கிட்டதட்ட63 வயது இருக்கலாம். பிரபல மருத்துவர். கோத்தகிரியில் உள்ள தன்னுடைய மருத்துவ சேவையை விட்டுவிட்டு, ராசி புரத்தில் தாத்தாவும் பாட்டியும் பேரனும் ஓர் நல்ல வீடு எடுத்து தங்கினார்கள். பாட்டியின்வேலை அவனை வேளா வேலைக்கு நல்ல சத்தான உணவை ஆக்கி தருவது, நேரத்திற்கு தூங்க வைப்பது. தாத்தா அவனுக்கு நல்ல ஆலோசனைகளையும், தன்னம்பிக்கையும் தருவது. தாத்தா பகல் பொழுதில் அங்குள்ள பலருக்கு மருத்துவ சேவையை தொடர்ந்தார்.

இரண்டு ஆண்டு காலம் உருண்டு ஓடிற்று. தேர்வுகள் வந்தன. பேரன் நன்கு அனைத்து தேர்வுகளையும்எழுதினான். மதிப் பெண்கள் வந்தன. 95% மதிப் பெண்கள் எடுத்து இருந்தான். நுழைவு தேர்விலும்94% எடுத்து இருந்தான். நிறைய மதிப் பெண் எடுத்து இருந்தும், சென்ற ஆண்டுகால மதிப் பெண்களை ஓப்பிட்டு பார்த்ததில் அவனுக்கு மருத்துவம் கிடைக்குமா கிடைக்காதா என்று கவுன்சலிங் வரை காத்து இருக்கவேண்டும் என்ற கட்டாயம்.

பாகமாஸில் இருந்து அப்பாவும் அம்மாவும் கடந்த காலங்களில் சம்பாரித்த பணத்தோடு கோவை சென்றார்கள். கவுன்சிலிங் நாள் வந்தது. மகனுக்கு கோவை மருத்துவ கல்லூரியிலேயே மருத்துவ மேற்படிப்பிற்கு இடம் கிடைத்தது. பெற்றோருக்கு அளவில்லா ஆனந்தம்.

அவனுடைய இந்த வெற்றிக்கு யார் காரணம்? பாட்டி - தாத்தா அல்லாவா? கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர்கள் தங்களுடைய வாழக்கையை பேரனுக்கு அர்பணித்தை பார்க்கும் பொழது தாத்தா - பாட்டி என்று சொல்லுக்கு எவ்வளவு பெரிய மரியாதையை சேர்த்து வைத்துள்ளார்கள். இப்படியும் ஓர் தாத்தாவா? எனக்கு மாபெரும் ஆச்சர்யம்? காரணம் அவர் ஓர் மருத்துவர். தனக்கென்ற ஓர் வாழ்க்கை உள்ளவர். மகளின் பையனுக்காக இரண்டு ஆண்டு காலம் வெளியூரில் தங்கி பேரனை மருத்துவர் ஆக்கிவிட்டாரே என்று நினைக்கும் பொழுது மனம் எல்லை இல்லா மகிழ்ச்சி அடைகிறது.

இந்த தாத்தா பாட்டி மட்டும் அல்ல, அமெரிக்காவில் / வெளிநாட்டில் உள்ள மகளுக்கோ மகனுக்கோ குழந்தை பிறந்தவுடன் இங்குவந்து கிட்டதட்ட 6 மாதம் முதல் 12 மாதம் வரை இருக்கும் பல தாத்தா பாட்டிகளை நினைக்கும் பொழுதும் மனம் மகிழ்ச்சி அடையதான் செய்கிறது.

இயற்கை தாய் தாத்தா பாட்டிக்கு நல்ல ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் தரட்டும்....

நன்றி

மயிலாடுதுறை சிவா...

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

2 Comments:

Blogger -L-L-D-a-s-u said...

arumai sivaa avarkaLe

Monday, October 02, 2006 3:42:00 PM  
Blogger மயிலாடுதுறை சிவா said...

மிக்க நன்றி தாசு

சிவா...

Monday, October 02, 2006 6:44:00 PM  

Post a Comment

<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது