Thursday, May 03, 2007

அமைச்சர் தங்கம் தென்னரசு - பாராட்டுகள்!!!

அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கு பாராட்டுகள் பல...


18 நாள் கோடைகால பயிற்சி தொடக்கம்
செயல்வழி கற்றல் முறையில் கிராம மாணவர்கள் வேகம்
அமைச்சர் தகவல்

சென்னை, மே 3: ÔÔசெயல்வழி கற்றல் முறையில், நகரங்களில் உள்ள மாணவர்களைவிட கிராம மாணவர்களே வேகமாகவும், சிறப்பாகவும் கற்கின்றனர்ÕÕ என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார். தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், 4 மற்றும் 5ம் வகுப்பு மாணவர்கள், தமிழை தடையில்லாமல் வாசித்து, பிழையில்லாமல் எழுதவும், கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் உள்ளிட்ட அடிப்படை கணக்குகளை தவறில்லாமல் செய்யவும், 18 நாள் கோடை கால பயிற்சி திட்டம் சென்னையில் நேற்று நடந்தது.

பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, திட்டத்தை தொடங்கி வைத்து பேசியதாவது:

செயல்வழி கற்றல் மூலம் பாடங்களை கற்கும்போது, மாணவர்களுக்கு இனிமையாக இருக்கும். வகுப்பறைச் சூழல் மகிழ்ச்சியாக இருக்கும். செயல்வழி கற்றல் முறையின் செயல்பாடுகள் குறித்து பள்ளிகளை ஆய்வு செய்ததில், நகரங்களில் உள்ள மாணவர்களைவிட கிராம மாணவர்களே வேகமாகவும், சிறப்பாகவும் கற்கின்றனர். இது இன்ப அதிர்ச்சி.

பயிற்சிக்கு பிறகு மாணவர்கள் நல்ல பலன் பெறுவார்கள். 12 லட்சம் மாணவர்கள் இதில் பயன்பெறு வார்கள். இவ்வாறு அமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார். அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மாநில திட்ட இயக்குனர் விஜயக்குமார், பள்ளிக் கல்வித் துறை செயலர் குற்றாலிங்கம், சென்னை மேயர் மா.சுப்பிரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நன்றி : தினகரன்.

மயிலாடுதுறை சிவா...

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

1 Comments:

Blogger அபி அப்பா said...

சிவா! நட்சத்திர வாழ்த்துக்கள்! நல்ல பதிவுகள் தாங்க, முக்கியமா நம்ம மயிலாடுதுறை பத்தி ஒரு சூப்பர் பதிவை தாங்க!!!

Sunday, May 20, 2007 9:18:00 PM  

Post a Comment

<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது