Thursday, August 21, 2008

ஜெயலலிதா - இராமதாஸ் சந்திப்பு!!!


அரசியல் வானில் எல்லோரும் பரபரப்பாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த அந்த சந்திப்பு நடந்துவிட்டது! தொகுதி பங்கீட்டு பேச்சு வார்த்தையும் வெற்றிகரமாக நடைப் பெற்றது! கொடநாட்டில் கிட்டதட்ட125 நாட்கள் இருந்துவிட்டு மீண்டும் சென்னை வந்தவுடன் அரசியல் சதுரங்கத்தில் மிக வேகமாககாய்களை நகர்த்துவதில் வல்லவர் என்பதை ஜெயலலிதா மீண்டும் ஒருமுறை நிரூபித்து இருக்கிறார்.

ஓவர் டூ நமது நிருபர்...

மாலை 4.30 மணி

நேற்று மாலை பாமக கட்சித் தலைவர் கோக மணிக்கு ஓபி பன்னீர்செல்வம் தொலைப் பேசியில்கூப்பிட்டு அம்மா உங்கள் தலைவரை பார்க்க விரும்புவதாக சொன்னார். கோக மணி உடனேஅய்யா இராமதாஸை கூப்பிட்டு தொலைப் பேசியில் கூப்பிட்டு சொன்னவுடன், அய்யா என்று, எப்போழுது என்று கேட்டுள்ளார். உடன் கோக மணி உடன் ஒபி பன்னீர்செல்வத்தை கூப்பிட்டவுடன்அவர் இன்னும் 15 நிமிடங்களில் கூப்பிடுகிறேன். சரியாக 15 நிமிடத்திற்குள் கோக மணியைஓபி பன்னீர்செல்வம் கூப்பிட்டு இன்று மாலையே வைத்து கொள்ளலாம், இரவு 8 மணிக்கு வரமுடியுமா என்று கேட்டு கொண்டார்.

மாலை 5.00 மணி

கோக மணி உடன் அய்யா இராமதாசை தொலைப் பேசியில் கூப்பிட்ட பொழுது அய்யா செங்கல்பட்டு அருகே முன்னாள் மத்திய அமைச்சர் ஏகே மூர்த்தியுடன் "மது ஒழிப்பு பிரசாரத்தில்" ஈடுபட்டுகொண்டு இருந்தார். தகவலை தெரிவித்தவுடன் மாலை 7 மணிக்குள் சென்னை வந்து விடுகிறேன், அதற்குள் நீங்கள் மக்கள் தொலைக் காட்சி நிருபரையும், மக்கள் ஓசை நிருபரையும் தயாராகவைத்துவிடுமாறு கட்டளையிட்டார்.

இரவு 8.00 மணி

செங்கல் பட்டில் இருந்து இராமதாஸ் அய்யா சென்னை வந்தவுடன், அவருடைய அலுவலகத்தில்வேறு வெள்ளை சட்டை அணிந்துக் கொண்டு, ஒரு டம்பளிரில் இளநீர் மட்டும் குடித்துவிட்டுபோயஸ் தோட்டம் செல்ல தயரானார். அய்யா இராமதாஸ், கோக மணி, வேல் முருகன் மற்றும் மக்கள் தொலைகாட்சி நிருபர்கள் அனைவரும் போயஸ் தோட்டம் சென்றனர். போயஸ் தோடத்தில் வாசல் கதவு உடன் திறந்தவுடன் வாசலில் ஒபி பன்னீர் செல்வம், செங்கோட்டையன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் மைத்ரேயன் மூவரும் அய்யா இராமதாஸிக்குஇருகரம் கூப்பி வணக்கம் தெரிவித்து உள்ளே அழைத்து சென்றார்கள். செங்கோட்டையன் ஓடிவந்து அய்யா நிருபர்களை கடைசியாக அழைத்துக் கொள்ளலாம் என்றார். அய்யா இராமதாஸ்சிரித்துக் கொண்டே சரி என்றார். ஜெயா தொலைக் காட்சி நிருபர்களும் தயாராக இருந்தார்கள் வாசலில்!

உள்ளே சென்ற 5 நிமிடத்திற்குள் ஜெயலலிதா பச்சை நிறப் புடவையில் இருகரம் கூப்பி வணங்கிஎன்ன டாக்டர் செளக்கியமா? என்றார். அய்யா இராமதாசும் நான் நன்றாக இருக்கிறேன், நீங்கள்நலமா என்றும், கோடநாட்டில் நன்கு ஓய்வு எடுத்தீர்களா என்றும் கேட்டார்! ஓபி பன்னீர்செல்வமும், செங்கோட்டையனும் பயந்து பவ்யமாக நிற்க, எல்லோரும் அமருமாறு சகையிலே ஜெயலலிதாகையை காண்பித்தார். இராமதாஸ் பக்கம் கோக மணியும், வேல் முருகனும் அமர, அம்மா பக்கம் சற்று தள்ளி ஒபி எஸ், செங்கோட்டையன் மற்றும் மைத்ரேயன் அமர்ந்து இருந்தார்கள். அனைவருக்கும்மிதமான சூட்டில் தேநீர் வழங்கப் பட்டது!


அரசியல் சூழ்நிலைகளை கிட்டதட்ட 15 நிமிடங்கள் பேசிவிட்டு, ஜெயலலிதா என்ன ஓபி எஸ்தொகுதி பங்கீடு பற்றி டாக்டரிடம் முன்னரே சொல்லி விட்டீர்களா என்று கேட்டவுடன், ஒபி எஸ்சொல்லி விட்டேன் அம்மா என்றார். தொகுதி பங்கீட்டு கடிதத்தை அய்யா இராமதாஸ் ஒருமுறை படித்துவிட்டு பின்னர் அதில் ஜெயலலிதாவும் அவரும் கையெழுத்து இட்டு கொண்டார்கள். பின்னர்நிருபர்கள் உள்ளே வரவழைக்கப் பட்டு நிறைய புகைப் படங்களும், விடியோ காட்சிகளும் எடுக்கப் பட்டது!


இரவு 9.30 மணி


அய்யா இராமதாஸ் நிருபர்களிடன் நீங்கள் எதுவும் கேள்வி கேட்க வேண்டாம். நானே சொல்லிவிடுகிறேன். சகோதரி மிக அன்பாக நடந்து கொண்டார்கள். அவர்களிடம் நல்ல மாற்றம் தெரிகிறது.ஓர் பக்குவமும், நிதானமும், தமிழ்நாட்டிற்கு நல்லது செய்ய வேண்டும் என்ற ஆர்வமும் நன்குதெரிகிறது என்றார். நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே உள்ளது. பணிகள் நிறையஉள்ள காரணத்தால் இந்த போர்கால சந்திப்பு!

எங்களுக்கு சகோதிரி ஒதுக்கிய பாராளுமன்ற தொகுதிகள்

நாகர்கோவில், இராமநாத புரம், திருநெல் வேலி, விருதுநகர், திண்டுக்கல் மற்றும் தமிழர்கள் பெரிதும் வாழ்கின்ற பெங்களுர் மற்றும் மலேசியாவில் தலா ஒன்று கையெழுத்து ஆனாது என்றார்!

நிருபர்கள் அய்யா உங்களுடைய வாக்கு வங்கி தமிழ்நாட்டில் இந்த தொகுதிகளில் உள்ளதா என்று கேட்டவுடன், அய்யா சற்று கோபமாக பாமக கிளைகள் பரவாத ஊர்களே தமிழ்நாட்டில்இல்லை! நிச்சயம் அனைத்து தொகுதிகளிலும் ஜெயிப்போம்! முக்கியமாக தமிழர்கள் பிரச்சினையை முன்னிட்டு அம்மா பெங்களூரிலும், மலேசியாவிலும் கொடுத்து இருப்பது பாராட்டதக்கது என்றார்.


பெங்களூரில் உங்களது மகள் கவிதா போட்டி இடுவாரா என்று நிருபர் கேட்டதற்கு அவர் பதில் அளிக்க மறுத்து விட்டார்!


ஜெயா தொலைக் காட்சியிலும், மக்கள் தொலைக் காட்சியிலும் தலைப்பு செய்தியாக இந்தசெய்திகள் வர ஆரம்பித்துவிட்டன!


அரசியல் வானில் யாரும் எதிர்பார்க்கா வண்ணம் அய்யா இராமதாஸ் மற்றும் ஜெயலலிதா சந்திப்பு கலைஞரை பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது! கலைஞரின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது வரும் நாட்களில் தெரிந்துவிடும்....


நன்றி

மயிலாடுதுறை சிவா....

குறிப்பு : எனது நண்பர் லண்டன் ராஜா நான் என்னவோ பெரிய எழுத்தாளன் போல சிவா ப்ளீஸ் இராமதாஸ், ஜெயலலிதா சந்திப்பு பற்றி எழுதுங்கள் என்று கேட்டு கொண்டார், அவரின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த பதிவு!


Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

9 Comments:

Blogger Unknown said...

Very well drafted article. Soon it will become true.

Thursday, August 21, 2008 1:46:00 PM  
Blogger Unknown said...

Well done Siva, soon this will become true

Thursday, August 21, 2008 1:47:00 PM  
Blogger செல்வ கருப்பையா said...

//எங்களுக்கு சகோதிரி ஒதுக்கிய பாராளுமன்ற தொகுதிகள்

நாகர்கோவில், இராமநாத புரம், திருநெல் வேலி, விருதுநகர், திண்டுக்கல் மற்றும் தமிழர்கள் பெரிதும் வாழ்கின்ற பெங்களுர் மற்றும் மலேசியாவில் தலா ஒன்று கையெழுத்து ஆனாது என்றார்!//
ஹா ஹா ஹா... ஆச்சரியப் படுவதற்கில்லை!

Thursday, August 21, 2008 1:49:00 PM  
Blogger சின்னப் பையன் said...

:-)))))

Thursday, August 21, 2008 2:32:00 PM  
Blogger -/சுடலை மாடன்/- said...

சிவா, பகிடி அருமை. முதல் இரு பத்திகள் உண்மை என்று எண்ண வைத்துவிட்டன.

நன்றி - சொ.சங்கரபாண்டி

Thursday, August 21, 2008 6:30:00 PM  
Blogger மயிலாடுதுறை சிவா said...

நன்றி மெயன் மேன், செல்வ கருப்பையா, சின்ன பையன் மற்றும் சுடலை மாடன்...

சும்மா போர் அடித்தது ஓர் பதிவு ராஜாவிற்காக போட்டேன்...

மயிலாடுதுறை சிவா...

Thursday, August 21, 2008 8:26:00 PM  
Anonymous Anonymous said...

உங்கள் பதிவை படித்தவுடன் விழுந்து விழுந்து சிரித்தேன், இது உண்மையிலேயே நடந்தாலும் நடக்கும்.

Thursday, August 21, 2008 9:51:00 PM  
Blogger Milton said...

Siva - Super O Super!!

Bengaluril deposit kooda kidaikkathu :)

Friday, August 22, 2008 5:41:00 AM  
Blogger Milton said...

Sivaa -- Super O Super!!

Bengaluril deposit kooda kidaikkaathu :) South Riding MP yai yedirththu yaarai niraththapp pogiraar :)

--K

Friday, August 22, 2008 5:45:00 AM  

Post a Comment

<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது