Thursday, April 28, 2005

நல்ல மனம் வாழ்க!!!

நான் தற்பொழுது வேலைப் பார்த்துக் கொண்டு இருக்கும் நிறுவனம் அமெரிக்கன் ரெட் கிராஸ். இங்கு உள்ள ஐடி பிரிவில்கிட்டதட்ட 500 பேர்கள் வேலை செய்கிறார்கள். அதில் 70% நிரந்தர வேலையிலும் 30% கன்சல்டன்கள் இருப்பார்கள்.தினமும் பலதரப்பட்ட இமெயில்கள் பல்வேறுத் துறையில் இருந்து வரும். அதில் சில மின் அஞ்சல்கள் இந்த வேலையில்இருந்து வேறு வேலைக்கு செல்லுவதாகவும், ஒய்வு பெறுவதாகவும் கடந்த நாட்களில் தங்களோடு பணிப் புரிந்ததற்கு நன்றி சொல்லி மின் அஞ்சல் அவ்பொழுது வரும். நிறுவன இயக்குனர் மற்றும் மேலாளர்கள் வாழ்த்தியும் மின் அஞ்சல் அனுப்புவார்கள்.

அதைப் போல் இன்று காலை ரோ ஓர் நண்பரிடம் இருந்து மின் அஞ்சல் வந்தது. கடந்த 3 ஆண்டுகளாக தங்களோடு பணிப் புரிந்த அனுபவத்திற்கு நன்றி கூறி அதோடு சிறப்பு செய்தியாக வருகிற சனி அன்று இந்தியா சென்று மீண்டும் குடியேறப் போவதாக வந்தது. நான்உடனே அந்த நபருக்கு வாழ்த்து தெரிவித்து விட்டு, தாங்கள் அமர்ந்து இருக்கும் இடம் சொன்னால் உங்களை வந்து பார்த்துவாழ்த்துகள் நேரில் சொல்லப் பிரியப் படுகிறேன் என்றேன். அவரிடம் இருந்து உடன் பதிலும் வந்தது.

கீழ்தளத்தில் அவர் இருந்தார். அவரை பார்க்க மிக ஆவலோடு சென்றேன். நமது தாய் நாட்டிற்கு செல்ல போகும் ஒருவரை நேரில்வாழ்த்துவது ஓர் பெருமையான விசயமாக நான் நினைத்து கொண்டு, அவர் இருக்கும் இடம் தேடிச் சென்றேன். என்னை இன்முகதோடுவரவேற்றார். வயது கிட்டதட்ட 35 இருக்கலாம். அலுவலகம் போகும் போழுது அல்லது வரும் போழுது அவரை நான் பார்த்து இருக்கிறேன்.முதல் 2 நிமிடங்கள் ஆங்கிலத்தில் உரையாடிக் கொண்டு இருந்தோம். இந்தியாவில் எங்கு குடியேற திட்டம் என்றேன், அவர் திருச்சியில் கொஞ்சநாள் பிறகு பெங்களூர் அல்லது சென்னை என்றார். நான் உடனே நீங்கள் "தமிழா" என்றேன். அவர் அமெரிக்கா வந்து கிட்டதட்ட 6.5 ஆண்டுகள் ஆகிவிட்டது என்றும், திரும்ப ஊருக்கு செல்லலாம் எனமுடிவு எடுத்து விட்டேன் என்றார்.

அவரிடம் விடைப் பெறும் பொழுது அவர் சொன்ன வார்த்தை காதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. அவருடைய அப்பா இன்னும் இரண்டு மாதத்தில் திருச்சி BHEL நிறுவனத்தில் இருந்து ஓய்வு பெற போகிறாராம். கிட்டதட்ட 30 ஆண்டு பணிக்கு பிறகு ஓய்வுப் பெறுவதால் அப்பாகொஞ்சம் மன அழத்ததிலும், சற்று வருத்தமாகவும் காணப்படுகிறார், ஆகையால் அவரோடு இரண்டு மாதங்கள் இருந்துவிட்டு பின்னர் வேலைக்கு செல்லலாம் என உள்ளேன் என்றார்.

தந்தைக்கு மகன் ஆற்றும் உதவி...என்று நினைத்துக் கொண்டு நடைய கட்டினேன்...வாழ்க நல்ல உள்ளம்!!!

நன்றி
மயிலாடுதுறை சிவா...



Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

1 Comments:

Blogger ஜீன் said...

º¢Å¡,

¾Á¢Æ÷ ´ÕÅ÷ ¾¡ö ¿¡Î ¾¢ÕõÒŨ¾ À¡÷òÐ, ¦ÀÕ¨ÁÔüÚ, ¦¿¸¢úÔüÚ ¸ñ¸Äí¸ Å¡÷ò¨¾¸Ç¡ø ÅÊòÐ ¾óРŢðÎ «¦Áâ측Ţø ¸¡Äó¾ûÙõ ¿£í¸û ¾¡ý ¯ñ¨ÁÂ¡É þó¾¢Â ¾Á¢Æ÷.
M.XAVIER JEEN
mxjienn@yahoo.com

Monday, May 02, 2005 2:20:00 AM  

Post a Comment

<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது