Tuesday, October 11, 2005

மால்கம் எக்ஸ்(ரவிக்குமார்_காலச்சுவடு)

அக்டோபர் 11, 2005

ரொம்ப நாட்களாக வலைப் பூவில் எதும் எழுத முடியவில்லை. எதில் ஆரம்பிப்பது என்றுப் புரியவில்லை.

நான் மிகவும் ரசித்த படித்த புத்தகத்தைப் பற்றி எழதலாம் என்று நினைக்கிறேன். நீங்கள் ஓய்வாக இருக்கும் பொழுது இந்த புத்தகத்தை நிச்சயம் படித்து பார்க்க வேண்டும்.

தன்னலம் பாரமல் மக்களுக்கு போராடும் தலைவர்களை மிக விருப்பத்தோடு படிப்பது வழக்கம். அண்ணல் அம்பேத்கார், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கர்ம வீரர் காமராசர், மார்டின் லூதர் கிங், லிங்கன், இந்த வரிசையில் தற்பொழுது மால்கம் எக்ஸ் பற்றி படிக்கும் வாய்ப்பு ஏற்பட்டது.

காலச் சுவடின் பதிப்பில் பாண்டிச்சேரி திரு ரவிக்குமார் எழுதிய மால்கம் எக்ஸ் மிக அருமையான புத்தகத்தை ஓர் நண்பரிடம் இருந்து வாங்கி படிக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. திரு ரவிக்குமாரின் எழுத்துகளை ஆங்காங்கே படித்து இருக்கிறேன். ஆனால் தொடர்ந்து 22 அத்தியாயங்களை கிட்டதட்ட 135 பக்கங்களை படிப்பது இதுவே முதல் முறை.
முதலில் இதனை தொடராக வெளியிட்ட "எழுச்சி தலித் முரசுக்கு" மனதார நன்றிகளை சொல்லியே ஆக வேண்டும்.

நம் தமிழ் நாட்டில் வாழும் மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும், நம் மக்களுக்கு நம் அடிப்படை உரிமைகளை மீட்டு தரவேண்டும், நம் மக்கள் படும் வேதனைகளுக்கு நாம் பங்கு என்ன? ஒடுக்கப் பட்ட மக்களுக்கு நாம் எப்படி உதவலாம், நம் என்ன செய்ய வேண்டும் என்ற சிந்தனை உள்ள இளைஞர்களுக்கு மாலகம் எகஸின் போராட்டம் எப்படி என்று நன்கு விளக்குகிறது. ஆங்கிலத்தில் இருந்து அதனை தமிழில் சொல்லும் பொழுது படிக்கும் வாசகர்கள் அதனை விரும்பி படிப்பதற்கு ஏதுவாக எளிமையான மனதில் பதியும்படி மால்கமின் போரட்டத்தை விவரித்து இருக்கிறார் ரவிக்குமார். மால்கம் வாழ்ந்த காலங்கள், குழந்தைப் பருவம், இளைஞர், திருமண வாழ்க்கை, இறப்பு வரை மிக மிக அருமையாக வாழ்க்கையின் தளங்களை அதன் அருகே இருந்து சொல்வது போல் இருந்தது ரவிக்குமாரின் எழுத்து. ஓவ்வொரு அத்தியாயம் முடியும் பொழுது அடுத்த அத்தியாயம் என்ன நடக்கும் என்றும், மால்கமின் வாழ்க்கை அவரை எப்படி இழுத்து செல்கிறது என்றும் மிக மிக ரசிக்கும் படி அதனை மொழி பெயர்த்து இருக்கிறார் ரவிக்குமார்.

மால்கம் குழுந்தை பருவத்தில் அவர் அடைந்த இன்னல்கள், ஆசிரியாரல் அவர் பாதிக்கபடுவது, திருமணம் வேண்டாம் என நினைத்த மால்கம் திருமணம் செய்ய முடிவு எடுத்தது, இளைஞராக இருக்கும் பொழுது சிறை சென்றது, அதில் இருந்து மீண்டு வந்தது, சிறை வாழ்க்கை அவரை வெகுவாக பாதிக்கப் பட்டு தன்னை அரும்பாடு பட்டு தன்னை ஓர் புதிய மனிதனாக உலகிற்கு காட்டிக் கொண்டார். சிறையில் ஏராளமான புத்தகங்களை படித்து தன்னை நன்கு செதுக்கி கொண்டார் மால்கம். அதுமட்டும் அல்ல சிறை வாழ்க்கையில் அவர் தன்னை இஸ்லாம் மதத்தில் ஈடுபடுத்தி கொண்டார். தன்னை ஓர் சக்தி வழிநடத்துவதாக அவர் நினைத்தார், அது இஸ்லாமின் பங்கு என்று மனப்பூர்வமாக நம்பினார்.

கறுப்பின் இன மக்களுக்கு தன்னை அவர் அர்பணித்து கொண்டார், வெள்ளையர்களை எதிர்த்து போராட "கறுப்பு முஸ்லிம்கள்" என்று போர்வையில் அவர் தன்னை போராட்டத்தில் ஈடுபடுத்திக் கொண்டார். தன் சிந்தனையில் அடிமைப் பட்டு கிடக்கும் கறுப்பு இன மக்களுக்கு எப்படியாவது நல் வழி காட்ட வேண்டும் என்று அயராது உழைத்தார். அவருடைய காலகட்டதில் அவர் நெருங்கி பழகிய மார்டின் லூதர்கிங், குத்து சண்டை வீரர் முகமது அலி பற்றி மால்கம் குறுப்பிட்டு உள்ளார்.

Image Hosted by Your Image Link

மால்கம் மிகச் சிறந்த பேச்சாளராக விளங்கினார். அவருடைய ஆழ்ந்த அறிவு, விரிந்துக் காணப்பட்டு இருக்கும் அறிவு கேட்போரை பிரமிக்க செய்தது. அவருடைய பேச்சுகளை கெட்டு கறுப்பினர் மட்டும் அல்ல வெள்ளையர்களும் எப்படி ஓர் தனிமனிதனாக இப்படி பட்ட ஏராளமான மக்களை கவர முடிந்தது என்று வியந்தனர். மால்கமின் ஓர் சொல்லிற்கு
எண்ணற்று கறுப்பர்கள் பின்னால் நின்றார்கள்.


மால்கமின் பேச்சைப் பார்த்து விடுதலைக்கு போராடிய ஆப்ரிக்க நேஷனல் காங்கிரஸ் மற்றும் பாலுஸ்தீன விடுதலை இயக்கம் அவரை தம் தம் நாடுகளில் பேச அழைத்து அவரை அங்கீரித்த காரணத்தால் அவர் உலகத் தலைவர் வரிசையில் இடம் பிடித்தார்.

மால்கம் வாழ்க்கை முழுவதுமே புரட்சிதான்.
"புரட்சி என்பது ரத்தம் சிந்துவது,
புரட்சி என்பது சமரசமற்றது,
புரட்சி என்பது தனது பாதையில் எதிர்படும் அனைத்தும் தலைகீழாக புரட்டி போடுவது..."
அப்படிதான் மால்கமும் வாழ்ந்து வந்தார்.

மால்கம் ஓர் கறுப்பின போராளி மட்டும் அல்ல,
பணிய மறுத்து நிமிரும் தலைகளில், மால்கமின் தலை இருக்கிறது,
அடங்க மறுத்து வெளிபடும் குரல்களில், மால்கமின் குரல் இருக்கிறது,
தாழ மறுத்து உயரும் கரங்களில், மால்கமின் கரங்கள் இருக்கிறது.....

படித்து பாருங்கள் நிச்சயம் உங்களுக்கு பிடித்துப் போகும்.

நன்றி : காலச் சுவடு
நன்றி திரு ரவிக்குமார்

மயிலாடுதுறை சிவா...











Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

2 Comments:

Blogger பிச்சைப்பாத்திரம் said...

Siva,

Thanks for this post.


- Suresh Kannan

Thursday, October 13, 2005 12:28:00 AM  
Blogger முநி said...

அன்பு சிவா,
படித்து ரசித்தேன். நல்ல பதிவு.

அன்புடன்,
நித்தில்

Monday, October 17, 2005 12:59:00 PM  

Post a Comment

<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது