Wednesday, March 03, 2010

நடிகை ரஞ்சிதாவின் நிலமை?


நடிகை ரஞ்சிதாவின் நிலமை?

வாசிங்டன். மார்ச் 03,2010
நீண்ட நாட்களுக்கு பிறகு இந்த வலைப் பூவை புதுப்பிக்கிறேன்.

கடந்த இரண்டு தினங்களாக தமிழகமும் (இந்தியாவிலும்) நித்யானந்தர் (ராஜசேகரன்) பற்றி எங்கும் பேச்சு.

சன் தொலைக்காட்சி "ர" என்ற நடிகை என்றும், நக்கீரன் "ரஞ்சிதா" என்றும் வெட்ட வெளிச்சமாக எல்லாம் வந்தாயிற்று. நிறைய இணைய தளங்களில் விடியோவும், புகைப் படங்களும் வந்துவிட்டன! கொஞ்ச நாட்களுக்கு இது ஓடும்!

கடந்த காலங்களில், தமிழ்நாட்டில் இதுப் போல பல பரபரப்பு சம்பவங்களை பார்த்தும் இன்னும் கொஞ்ச நாளில் மக்கள் அதனை மறந்து, அடுத்த பரபரப்புக்கு தயார் ஆகிவிடுவார்கள்!

நித்யாவை (ராஜசேகரனை) எந்த வழக்கில் கைது செய்ய முடியும் என்றும் அல்லது கைது செய்தாலும் கொஞ்ச நாட்களில் அவர் பிணையில் வந்து விடுவார். ஆனால் அவருக்கு இருக்கும் அசையும் அல்லது அசையா சொத்துக்கள் ஏராளம், பல கோடிகள் தேறும்! நிறைய பணங்களை பெற்றுக் கொண்டு ஏதாவது வக்கீல் வாதாடி அவரை வெளியே கொண்டு வந்து விடுவார், ஆனால் ரஞ்சிதாவின் நிலை?

ரஞ்சிதா திரைப் பட நடிகை, அதுவும் பாரதிராஜா அறிமுகம் வேறு! முன்னாள் சில பிரபல நடிகர்களுடன் நடித்தும், பேசியும், பழகியும் இருப்பார். தற்பொழுது சின்னத் திரையிலும் நடித்துக் கொண்டு இருக்கிறார். இவர் மயங்கும் அளவிற்கு நித்யாவின் பேச்சு (போதனைகள்) இருந்து இருக்குமா? நித்யா ஒன்றும் பார்ப்பதற்கு லட்சணமாக இல்லை! எப்படி இவரிடம் ரஞ்சிதா மயங்கினார் அல்லது அடிமையானார்? ரஞ்சிதாவிற்கு எப்படி நித்யாவின் தொடர்பு ஏற்பட்டு இருக்கும்? அவரிடம் இருக்கும் ஏராளமான சொத்துகள் ரஞ்சிதாவை மயக்கி இருக்குமா?

இவர்களுடைய விடியோ தொகுப்பை பார்க்கும் பொழுது, கணவன் மனைவி அன்பை விட, இதில் மிக மிக பாசமாக நடந்து கொள்வதும், அவரை அப்படி பார்த்து கொள்கிறார்! எல்லாவற்றிக்கும் பணம் ஒன்றுதான் காரணமாக இருந்து இருக்குமா? ரஞ்சிதாவிற்கு ஏராளமான நகைகள், பணங்கள், கார், வீடு நித்யா கொடுத்து இருப்பாரா?

இதனை நான் எழுத காரணம், என் நண்பர் ஒருவர் அநேகமாக ரஞ்சிதா தற்கொலை செய்து கொள்வார்! என்றார். இதுவரை இதனை ஏதோ ஜாலியான மனப் போக்கில் பார்த்த நான், ரஞ்சிதா தற்கொலை செய்து கொள்வார் என்றதும், மனம் ஏனோ சற்று வருத்தம் அடைய செய்தது.

இனிமேல் அவர் தொடர்ந்து நடிக்க முடியுமா? அல்லது தமிழகத்தில் வாழதான் முடியுமா? ரஞ்சிதா இவற்றின் நினைவுகளில் இருந்து எப்படி மீண்டு வருவார்? நடிகை ரஞ்சிதாவிற்கு ஒரு பையன் இருக்கிறான் (சரியாக தெரியவில்லை) என்று நினைக்கிறேன். இந்த பையனின் நிலமை என்ன? அந்த பையனின் எதிர் காலம் என்னவாகும்?

எத்தனையோ நடிகைகள் அல்லது குடும்ப பெண்கள் அல்லது விலை மாதுக்கள் இதுப் போன்ற லீலைகளை தினம் செய்து வந்தாலும், இவர் திரைப் பட நடிகை என்பதாலும், பிரபல சாமியாருடன் தொடர்பு ஏற்படுத்தி இருப்பதாலும் இந்த பரபரப்பு செய்திகள்! இவற்றிக்கு அப்பாற்பட்டு ரஞ்சிதா என்ற பெண்ணின் நிலை என்னவாகும்? எல்லா தவறுக்கும் இவரின் ஆசையே காரணமாக இருந்து இருந்தாலும், இவர் இப்படி நித்யா என்ற போலி சாமியார் வாயிலாக தன் வாழ்க்கை இப்படி அடியோடு மாறும் என்று எதிர் பார்த்து இருப்பாரா?


மயிலாடுதுறை சிவா...

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

9 Comments:

Blogger அரவிந்தன் said...

இலட்க்கனக்கான மக்கள் தெய்வமாக நம்பும் ஒருவரிடம் படுக்கிறோமே என்ற குற்ற உணர்வு துளியும் இல்லை.

முற்றும் துறந்த துறவி என்று மக்கள் நம்பும் ஒருவரிடம் நாம் படுக்கையை பகிர்ந்து கொள்கிறோமே என்ற உறுத்துதல் கொஞ்சம் கூட ரஞ்சிதாவிடம் இல்லை.



இராஜசேகர் கேடிதான் அதே அளவுக்கு கேடியுடன் துணை போன ரஞ்சிதாவை என்ன சொல்வது

Wednesday, March 03, 2010 1:45:00 PM  
Blogger சவுக்கடி said...

திரைப்பட நடிக நடிகையர் பற்றித் தெரியாமல் எழுதியிருக்கிறீர்கள்!

ஒருகாலத்தில் 'விபச்சார' வழக்கில் கைதாகிய அஞ்சலிதேவிக்கு வீடு தேடிச் சென்று முன்னாள் இந்நாள் முதல்வர்கள் வாழ்த்துச் சொல்கிறார்கள்.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கும் போது -

இந்த ரஞ்சிதா மட்டுமல்ல, எந்த நடிகையும் இப்படிப்பட்ட காரணத்திற் கெல்லாம் தற்கொலை செய்து கொள்வார்களா?

Wednesday, March 03, 2010 1:57:00 PM  
Blogger kuruvi said...

உண்மையில் பரிதாபத்துக்குரிய ஒரு பெண்ணாகத்தான் இருக்கிறார். இவரின் நிலை மற்றவர்களுக்கு ஒரு பாடம்!

Wednesday, March 03, 2010 2:56:00 PM  
Blogger Unknown said...

ரஞ்சிதா வை பற்றி என்ன கவலை?, தற்கொலை கண்டிப்பாக செய்துகொள்ள மாட்டாள்!. இன்னும் பல கொலைகள்
நடக்க காரணமாக இருப்பாள். நான் அமைதி தேடி போநேஇன், சாமி என்னை வலையில் வீழ்த்தி விட்டார் என்று ஒரு அழுகை சீன போட்டால்..முடிந்தது கதை. அவள் குடும்பம், அவள் பிள்ளையின் எதிர்காலத்தை பத்தி கவலை இருந்தால் எந்த ஒரு பெண்ணும் இப்படி பட்ட கீழ்த்தரமான காரியத்தை செய்ய மாட்டார்கள். நாட்டில் பல ரஞ்சிதாக்கள் , பல குடும்பங்களை அழித்து கொண்டுதான் இருகிறார்கள்..இப்போது கவலை ரஞ்சிதாவை பற்றியோ அல்லது நித்யனன்தரை பற்றியோ கிடையாது. நித்யா வை பின் தொடர்ந்தவர்களின் நிலைமை தன் ஐயோ பாவமாக இருக்கிறது. வெளியில் தலை கட்ட முடியவில்லை அவர்களால். அவரால் யாரேனும் தற்கொலை செய்து கொள்ள கூடும்! சிலர் ஒரு படி மேல பொய் தங்கள் பிள்ளைகளை ஆசிரமத்து பள்ளியில் படிக்கச் வைத்துள்ளர்கள்!. அந்த குழந்தைகளின் எதிர் காலம் பற்றி கொஞ்சம் யோசியுங்கள்..இது போன்று இன்னும் பல சொல்லிகொண்டே போகலாம். பொறுத்திருந்து பாருங்கள், சாய் பாபா , பிரேமனந்தா, வரிசையில் நித்தியானந்தா, தொடரும்..

Wednesday, March 03, 2010 3:52:00 PM  
Blogger அரசூரான் said...

சிவா, அண்ணன் தொல்.திருமாவுக்கு பிறகு ஜொல்.ரஞ்சிதா(ம்மா) பற்றிய பதிவத்தான் ரொம்ப உணர்சி பூர்வமா எழுதியிருக்கீங்க. ஏன் சிவா ஏன்... இருந்தாலும் உங்க குசும்பு தாங்களப்பா... த.கொ ஐடியா இல்லாட்டி நீங்களே நினைவுப்படுத்திடுவீங்க போல. காணொளிய கண்டவுடன் நாக்கை பிடிங்கி சாவலாம்ன்னு நினைச்சாங்களாம்... ஆனா கை எச்சில் ஆயிடும்னு முடிவ மாத்திக்கிட்டாங்களாம்... அவ்வ்வ்வ்வ்வ்.

Wednesday, March 03, 2010 4:20:00 PM  
Blogger மஞ்சள் ஜட்டி said...

அய்யா, சாமியார்களுக்கு பொதுவாகவே இந்திரியம் அதிகமாம். அதுவும், 32 வயதான ராஜசேகரனுக்கு சும்மா நெருப்பாகவே இருக்க வாய்ப்பு அதிகம். மேலும், அந்த வீடியோ பார்த்தீங்கன்னா, அம்மணி எதோ மாத்திரை குடுக்குறாங்க, அத்தை அவுரு நாக்கு கீழே வெச்சிட்டு உடனடியா தன வேட்டிக்குள்ள கை விட்டு செக் பண்ணிக்கிறாரு. அப்பால கச முசா தான்... இதெல்லாம் கன்சிடர் பண்ணி அம்மணி அவுரு கிட்ட விழுந்திருக்கணும்?

Wednesday, March 03, 2010 5:42:00 PM  
Blogger மஞ்சள் ஜட்டி said...

இனொன்னு, டீல் பேசி இருப்பாங்க சன் டிவி காரங்க???? சரியா படிஞ்சிருக்காது ..உடனே தோலுரிச்சி காட்டிட்டாங்க.... பாத்தீங்களா!! அங்கன "கல்கி சாமியார்" போதை லேகியம் குடுத்து "ஹோமோ செக்ஸ்" பண்ணி மாட்டிக்கிட்டாரு?? மேலும், எனக்கு ஒரு டவுட்...விகடன் ஏன் சைலண்ட்டா இருக்கு?? நித்யாவோட புக்கை விக்கிறதுநாலேயோ??

Wednesday, March 03, 2010 5:56:00 PM  
Blogger ராம்ஜி_யாஹூ said...

dont worry \

we will forget all this and Ranjithaa need not commit suicide. I hope she wont do that too.

We have seen Jayamala in sabarimalai money issue. same way this story too

Thursday, March 04, 2010 7:45:00 AM  
Blogger சரண் said...

இங்க ரஞ்சிதாவைத் தப்புப் பண்ணியவளாக நினைக்கும் பின்னூட்டாளர்களைப் பார்த்தால்..

குறிப்பாக..

//இலட்க்கனக்கான மக்கள் தெய்வமாக நம்பும் ஒருவரிடம் படுக்கிறோமே என்ற குற்ற உணர்வு துளியும் இல்லை.

முற்றும் துறந்த துறவி என்று மக்கள் நம்பும் ஒருவரிடம் நாம் படுக்கையை பகிர்ந்து கொள்கிறோமே என்ற உறுத்துதல் கொஞ்சம் கூட ரஞ்சிதாவிடம் இல்லை.//

”அடப்பாவிகளா.. நீங்களெல்லாம் திருந்தவே மாட்டீர்களாடா..” ன்னு கூவத்தோனுகிறது..

Thursday, March 04, 2010 8:52:00 AM  

Post a Comment

<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது