Tuesday, May 05, 2009

ஈழப் பிரச்சினை - தமிழக தேர்தலை பாதிக்குமா?

ஈழப் பிரச்சினை - தமிழக தேர்தலை பாதிக்குமா?

வாசிங்டன் - மே 05 2009

கடந்த ஒரு மாத காலமாக அமெரிக்க வாழ் மற்றும் தமிழ் நாட்டு நண்பர்களுடன் தேர்தல் பற்றி எத்தனை முறை பேசினாலும் அலுக்கவே இல்லை! சில சமயம் சண்டையில் போய் முடிந்து விடுகிறது!!!

ஆனால் தமிழ் உணர்வாளர் மற்றும் பற்றாளர் ஜெ, நான் ஈழம் வாங்கி தந்து விடுவேன் என்று சொன்னவுடன் அடிப்படையில் தமிழ் உணர்வாளர்களில் சிலர் திடீரென்று ஜெ வின் பழைய குற்றங்களை அப்படியேமறந்துவிட்டு ஒரே ஜெ புராணம்!

அடிப்படையில் இவர்களிடம் நான் ஒன்று புரிந்துக் கொண்டேன். இவர்கள் அனைவருக்கும் ஜெ ஜெயிக்க வேண்டும் என்பதை விட, கலைஞர் தோற்க வேண்டும் என்று அடி மனதில் ஒரு வன்மம் இருக்கிறது! அதிலும் ஒரு நண்பர் என்னிடம் அஞ்சா நெஞ்சன் அழகிரி தோற்பது உறுதி என்றும், அவர் நிச்சயம் தோற்பார் என்றார்! இவரிடம் மேற் கொண்டு அரசியல் பேச வேண்டுமா? என்று எனக்கு தோணியது!

நேரிடையாக விசயத்திற்கு வந்து விடுகிறேன்! இந்த நாடளுமன்ற தேர்தலில் ஈழ பிரச்சினை நிச்சயம் ஒரு பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது, இதில் மாற்று கருத்து எனக்கிலை! ஆனால் இவை முழுக்க முழுக்க ஓட்டுகளை மாற்றி போடுமா என்று தெரியவில்லை!

ஒரு தமிழ் உணர்வாளராக காங்கிரஸ் எல்லா தொகுதிகளிலும் தோற்க வேண்டும் என்று ஆசைப் பட்டாலும் யாதர்த்த உண்மை எப்படி இருக்கும் என்று புரியவில்லை! இப்படி பேசலாம்....

தமிழ் இனத்தை கொன்று குவிக்கும் ராஜபக்சேவை தன் திருமண விழாவிற்கு அழைத்த மயிலாடுதுறை வேட்பாளர்மணி சங்கர் தோற்றால்.....(ஓ எஸ் மணியன் ஜெயிக்க வேண்டும்!!!)

தமிழ் இன விடுதலைக்கு தொடர்ந்து எதிராக பேசி வரும் ஈரோடு வேட்பாளர் ஈவிகேஸ் இளங்கோவன் தோற்றால்.....(பொடா சிறை வாசம் சென்ற கணேசமூர்த்தி ஜெயிக்க வேண்டும்!!!)

நிதித்துறை மற்றும் உள்துறை பதவியில் இருந்து தமிழ் இன அழிப்பை தடுக்க எந்த முயற்சியும் எடுக்காமல் இருந்த சிவகங்கை வேட்பாளர் சிதம்பரம் தோற்றால்....(ராஜ கண்ணப்பன் ஜெயிக்க வேண்டும்!!!)

தமிழ் விடுதலைக்கு போராடி வரும் பேராளிகளை பற்றி தவறாக பேசும் சேலம் வேட்பாளர் தங்கபாலு தோற்றால்.....(செம்மலை ஜெயிக்க வேண்டும்!!!)

எல்லாவற்றிக்கும் மேலாக ஈழ மக்கள் விடுதலைக்கு தொடர்ந்து போராடி வரும் என் அண்ணன் தொல் திருமா மிகப் பெரிய வெற்றி அடைந்தால்.......(பொன்னு சாமி டெப்பாசிட் காலியாக வேண்டும்!!!)

ஈழ மக்களின் விடுதலைக்கு என் உடம்பில் ரத்தம் இருக்கும் வரை போராடுவேன் என்று கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வரும் வைகோ ஜெயித்தால்.......(மாணிக் தாகூர் தோற்க வேண்டும்!!!)

ஈழ பிரச்சினை நம் தங்க தமிழ் நாட்டில் ஒரு முக்கிய பிரச்சினை என்று எடுத்து கொள்ளலாம்....இவைகளில்ஒன்று இரண்டு மாறி நடந்தால் கூட,

ஊடகங்கள் சொல்வதை நிராகரித்து, ஈழ பிரச்சினை ஒரு பெரிய பிரச்சினை இல்லை என்று எடுத்து கொள்ள வேண்டும்!


சாகும்வரை ஈழ மக்களின் விடுதலைக்கு மனதார ஆறுதல் அளித்துவிட்டு, தமிழக அரசியலுடன் அதனைப் போட்டு குழப்பி கொள்ளமால்...வாக்குவாதம் செய்யாமல்....இருப்பது நலம் என்று தோன்றுகிறது.....

இவை எல்லாம் விட்டு விட்டு, அழகரி தோற்க வேண்டும், தயாநிதி தோற்க வேண்டும், காடு வெட்டி குரு ஜெயிக்கவேண்டும் இதெல்லாம் டூ மச்!!!

நன்றி!

மயிலாடுதுறை சிவா....

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

4 Comments:

Blogger தமிழ் சசி | Tamil SASI said...

Your wish is everybody's wish.

I never bothered about Azhagiri losing or wining. But I want Dayanidhi to lose. Chidambaram, EVKS, Thangabalu should lose badly

Vaiko will definitely win

But the news from Chidambaram is not encouraging. Thiruma is struggling and facing a tough fight. Even if he wins, he can win only by few thousand votes. He is in a bad alliance at this time. Also, the constituency rearrangement is working against him

Tuesday, May 05, 2009 9:02:00 AM  
Blogger அபி அப்பா said...

சிவா சிவா என்னத்த் சொல்ல!

Tuesday, May 05, 2009 9:04:00 AM  
Blogger உடன்பிறப்பு said...

//இவை எல்லாம் விட்டு விட்டு,
அழகரி தோற்க வேண்டும், தயாநிதி தோற்க வேண்டும், காடு வெட்டி குரு ஜெயிக்கவேண்டும் இதெல்லாம் டூ மச்!!!//

சூப்பர் டச்

Tuesday, May 05, 2009 9:42:00 AM  
Blogger மயிலாடுதுறை சிவா said...

நன்றி சசி!

அண்ணன் திருமா தோற்றுவிட்டால் என் மனம் உடைந்து விடும்!

நன்றி அபி அப்பா, உடன் பிறப்பு

மயிலாடுதுறை சிவா...

Tuesday, May 05, 2009 11:11:00 AM  

Post a Comment

<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது