Thursday, October 13, 2005

எனக்குப் பிடித்த கவிதைகள்...

எனக்குப் பிடித்த கவிதைகள்...

இந்த பதிவு நண்பர்
சுரேஷ் கண்ணனுக்காக...

வலைப் பூவில் நான் சுரேஷின் கண்ணனின் எழுத்துகளை விரும்பி படிப்பது உண்டு. அதிலும் அவர் ஏதாவது திரைப் படத்தை விமர்சனம் செய்வதும், குறிப்பாக அவர் மன சம்பந்தபட்ட மேலும் சில உளவியல் காரணங்களை சொல்லும் பொழுது நான் விரும்பி வியந்து ரசிப்பது உண்டு. அவரோடு நிறைய கருத்துகளோடு ஒத்து போவது உண்டு. சென்னை செல்லும் பொழுது அவரை பார்க்கவும் ரொம்ப விருப்பம்.

முன்பு ஓர் முறை நண்பர் சுரேஷ் கண்ணன் கவிதைகள் பற்றி ஓர் பதிவு போட்டு இருந்தார். அதில் அவருக்கு கவிதைகள் மீது ரொம்ப ஈடுபாடு அல்லது உடன்பாடு இல்லை என்பதுப் போல் ஏதோ எழுதி இருந்தாக நினைவு. அப்போழுதே அவருக்கு சில கவிதைகளை எடுத்துக் காட்டி பதில் சொல்ல ஆசைப் பட்டேன். என்னால் விகடனில் (2002) பரிசைப் பெற்ற கவிதை தொகுப்புகளை உடன் தேடி எடுக்க முடியாமல் போய்விட்டது. நேற்று வீட்டில் ஏதோ ஒன்றோ தேடப் போக அந்த கவிதை தொகுப்பு கிடைத்துவிட்டது. அதில் உள்ள பல கவிதைகள் எனக்கு பிடித்து இருந்தாலும், சில கவிதைகளை நண்பர் சுரேஷ் கண்ணனுக்காக மீட்டு கொடுக்க ஆசைப் படுகிறேன்.

என் மனதை பிழிய வைத்த கவிதை

வலியின் ஒலி

வாழ்ந்து கெட்டவனின்
பரம்பரை வீட்டை
விலை முடிக்கும்போது
உற்றுக்கேள்
கொல்லையில்
சன்னமாக எழும்
பெண்களின் விசம்பலை

- மகுடேசுவரன்
- நன்றி : ஆனந்த விகடன் (2002)

இந்த கவிதை எனக்கு நேரிடையாக தொடர்பு உடையது. என் உறவினர் ஒருவர் பொருளாதார நெருக்கடி காரணமாக தான் வாழ்ந்த வீட்டை தன் பிள்ளைகளின் வளர்ச்சிக்காக வீட்டை விற்கும் பொழுது அவர்கள் வீட்டு பெண்கள் அழுததை நான் கண்களால் பார்த்து இருக்கிறேன். வீடு என்பது என்ன வெறும் செங்கல், கற்கள், மண், சிமெண்டுகளால் எழுப்ப பட்டாதா? பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த நல்ல பல கெட்ட சில நினைவுகளின் சங்கமம் அல்லாவா? எனக்கு அந்த அளவு பொருளாதார பலம் அன்று இல்லாமல் போய்விட்டதே என்று பலமுறை வருத்தப் பட்டு இருக்கிறேன்.

அந்த வலியை, அந்த துயரத்தை, அந்த ஆழத்தை, அந்த நேசிப்பை நாம் உணர்ந்தாலும் யாரோ ஒருவர் அதனை எளிய தமிழில், எல்லோருக்கும் புரியும்படி, அந்த உணர்வை வார்த்தைகளால் வடிக்கும் பொழுது, நம் மனம் அதனோடு ஒன்றி போகிறது, மேலும் மனம் அதனை படித்து ரசிக்க சொல்லுகிறது...அந்த கவிதை வடிவத்தை ரசிப்பது ஓர் நல்ல ஆரோக்கியமான விசயம்தானே...

அதே போல் மற்றொன்று நாளைக்கு...

நன்றி

மயிலாடுதுறை சிவா...



Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

1 Comments:

Blogger Vaa.Manikandan said...

what abt magudeswaran's "kamakkadumpunal"?

if possible read it.fantastic one

Friday, October 14, 2005 7:35:00 AM  

Post a Comment

<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது