2011ல் பாமக நிலை? மருத்துவர் இராமதாசுக்கு கடிதம்!
வாசிங்டன் மார்ச் 26 2010
மதிப்பிற்குரிய மருத்துவர் அய்யா அவர்களுக்கு
வணக்கம். நேற்று பென்னாநகரத்தில் "திமுக" வை அழிப்பதுதான் என் வேலை! என்று சொன்ன காரணத்தால் இந்த கடிதம்....
நேரிடையாக விசயத்திற்கு வந்து விடுகிறேன்.
நாளை நடைப் பெறும் தேர்தலில் நீங்கள் இரண்டாவது இடம் வந்தால் சக அரசியல் பார்வையாளாராக நான் மகிழ்ச்சி அடைவேன்.
ஒரு வேளை திமுக தோற்றுவிட்டால், சக திமுக அனுதாபியாக வருத்தப் படுவேன்.
நான் நீங்கள் சார்ந்து இருக்கும் சாதி இல்லை என்றாலும், (எனக்கு சாதிகளில் நம்பிக்கை இல்லை. நான் எனது வாழ்க்கையில் நான் சாதியை கடைப்பிடிப்பதும் இல்லை!) உங்கள் மீது மிகுந்த நம்பிக்கையும், மரியாதையும் வைத்துள்ளவன். அதற்கு சில காரணங்களை பட்டியலிட ஆசைப் படுகிறேன்.
நம் தொப்புள் கொடி உறவுள்ள ஈழ மக்களுக்கு நீங்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருவது....
நம் தாய் மொழி தமிழுக்கும், தமிழிசைக்கும் நீங்கள் குரல் கொடுப்பது....
சளைக்காமல் தொடர்ந்து மது ஒழிப்பிற்காக போராடுவது...
தமிழ்நாட்டில் இளைஞர்களிடம் உள்ள சினிமா மோகத்தை குறைக்க போராடுவது....
வருடா வருடம் "மாதிரி பட்ஜெட்டில்" விவசாயத்திற்கு முன்னுரிமை கொடுப்பது....
ஓரளவு தந்தை பெரியாரின் பகுத்தறிவு கொள்கைகளை பிடித்து இருப்பது...
நான் பெரிதும் மதிக்கும் எங்கள் அண்ணன் தொல் திருமாவை (ஆரம்ப காலத்தில்) ஆதரித்தது....
இந்த தேர்தலில் பென்னாநகரத்தை நீங்கள் மிகவும் நம்ப காரணம் என்ன? உங்கள் சாதி ஓட்டுகள் தானே?! இந்த தேர்தலில் நீங்களும் பணம் நிறைய செலவு செய்தாக பல பத்திரிக்கைகள் கூறுகின்றனவே?
நடந்து முடிந்த நாடாளுமனற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் நீங்கள் வரலாறு காணத தோல்வியை அடைந்த பொழுதும்மீண்டும் இந்த தேர்தலில் போராடுவது பாராட்டுக்குரியது! ஆனால் இந்த தேர்தலில் தோல்வி பயம் இருக்கும் காரணத்தால்மக்கள் மனதில் என்றும் "பாமக" தான் என்று முன்னரே சொல்லி விட்டீர்கள்!
சென்ற நாடாளுமன்ற தேர்தலில் நீங்கள் தனிப்பட்ட முறையில் எடுத்த முடிவை, உங்கள் கட்சியை கூட்டி, நிர்வாகிகள் எடுத்த முடிவு என்று சொல்லி "அதிமுக" சென்றீர்கள்? என்ன பலன்?! அம்மா உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தின் மீதும் "வழக்கு"போட்டதுதான் மிச்சம்!!!
நேற்று திமுகவை அழிப்பதுதான் உங்கள் லட்சியம் என்கீறீர்கள்! உங்களிடன் ஒரே ஒரு கேள்வி? இந்த இடைத்தேர்தலில்நீங்கள் இரண்டாவது இடமோ அல்லது வெற்றியோ பெற்று விட்டால், வரும் சட்டமன்ற தேர்தலில் 2011ல் திமுகவுடன்கூட்டணி வைக்க மாட்டேன் என்று என்ன நிச்சயம்?! ஆகையால் அவசரப் பட்டு "திமுக"வை அழிப்பதுதான் என் வேலை என்று சொல்லி என்ன பலன்?! மக்கள் இதனையும் மறந்து விடுவார்கள்! நானோ எனது குடும்பமோ அரசியல் பதவியில் ஈடுப்பட்டால்என்னை சவுக்கால் அடியுங்கள் என்று சொன்னதை மக்கள் மறந்ததை போல, பாவம் எங்கள் மக்கள் எல்லாவற்றையும் மறந்து விடுவார்கள்!
வருகிற சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜய்காந்தை விருத்தாசலத்தில் முதலில் தோற்க அடித்துவிட்டு பிறகு "திமுக"வை அழிப்பது பற்றி யோசியுங்கள்!!!
2011 சட்டமன்ற தேர்தலில் உங்களின் நிலை என்ன?
வழக்கம் போல எங்கள் கலைஞர் மருத்துவர் அய்யாவும் நானும் கருத்து வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு நண்பர்கள் என்று சொல்லி உங்களுக்கு 10 அல்லது 15 சீட்டுகள் கொடுத்து விடுவார்! உங்களுக்கு மீண்டும் 10 அல்லது 15 சட்டமன்ற உறுப்பினர்கள் கிடைத்துவிடுவார்கள்!!!
மயிலாடுதுறை சிவா...