Friday, March 23, 2007

ராமாதாஸ் ஓர் மோசடி தலைவர் - வெற்றி கொண்டான்

நன்றி : குமுதம்

சமீப காலமாக டாக்டர் ராமதாஸ் தி.மு.க. அரசைக் கடுமையாக விமர்சித்து வருகிறார். ஒரே கூட்டணியில் இருந்து கொண்டே அரசைத் தாக்குவது, தி.மு.க. தரப்பில் பெரும் அதிருப்தியை உண்டு பண்ணியிருக்கிறது. ராமதாஸின் இந்தத் ‘தாக்குதல்’ அரசியலைக் கடுமையாக விமர்சிக்கிறார் தி.மு.க.வின் நட்சத்திரப் பேச்சாளர் வெற்றிகொண்டான்.

‘‘டாக்டர் ராமதாஸ் வில்லன் அரசாங்கம் நடத்தி வருகிறார். இது அவருக்குப் பழக்கப்பட்டதுதான். ஏற்கெனவே பாண்டிச்சேரியில் இப்படிச் செய்து பழக்கமிருக்கிறது. இப்போது தமிழகத்தில் கைவரிசையைக் காட்டத் துவங்கியிருக்கிறார். தன்னையும், தன்னுடைய மகனையும், அரசியலில் வைத்துக் கொண்டு தி.மு.க. ஆட்சியை மிரட்டும் வேலையில் சமீபகாலமாக ஈடுபட்டு வருகிறார்.

இப்படி தி.மு.க. அரசைத் தாக்குவதற்குக் காரணம், தன்னை முன்னிலைப்படுத்தவேண்டும் என்ற எண்ணம்தான். தன்னை முன்னிலைப்படுத்தி ‘கலைஞர் இடத்தை’ப் பிடித்து விடலாம் என்று நினைக்கிறார். ஆனால் கலைஞர் இடத்தைக் கடவுளாலேயே கூட பிடிக்க முடியாது. கடவுளே கலைஞரின் வீட்டு வாயில்படியில் நிற்கும் காலம் வந்துவிட்டது. அதற்கு சத்ய சாய்பாபாவே சாட்சி. கலைஞரை யாரேனும் குறைசொல்லக் கருதினால், தன்னுடைய நாட்டு மக்களை அவமானப் படுத்தியதாக அர்த்தம். யாரையும், எவனையும் நம்பி ஆட்சி நடத்தத் தேவையில்லை. நாடு என் தலைவர் பக்கம் நிற்கிறது. மக்கள் என் தலைவர் பக்கம் நிற்கிறார்கள்.

சாதாரணமாக இவர்களுக்கெல்லாம் கலைஞர் பதில் சொல்லத் தேவையில்லை. ஆனால், கூட்டணி தர்மத்துக்காக தலைவர் அவர்களுக்குப் பதில் சொல்கிறார். நான் கலைஞரைக் கேட்டுக் கொள்கிறேன். பெரியார்தான் ஐயா. இடையில் வருகிற எந்த தலைவனையும் ‘ஐயா’ என்று அழைக்கக் கூடாது. பெரியாரை ஐயா என்ற அழைத்த வாயால் இந்த மாதிரி ஆட்களையெல்லாம் ஐயா என்று சொல்வது அசிங்கம். கலைஞருக்கு எத்தனை பெருந்தன்மை. தன்னைவிட வயதில் சிறியவரான ராமதாஸை, மருத்துவர் ஐயா என்று மேடைதோறும் கூறுகிறார். அந்த மரியாதையைக் கூட தக்க வைத்துக் கொள்ள ராமதாஸ§க்குத் தெரியவில்லை.

இவர் எந்தக் கூட்டணியில் இருந்தாலும் அந்தக் கூட்டணியைப் பற்றி வெளிப்படையாக விமர்சிப்பதுதான் இவரது வாடிக்கை. அரசியல் நாகரிகம் தெரியாதவர். ஆட்சியில் குறைகள் இருந்தால், முதல்வரை நேரில் சந்தித்துச் சொன்னால், அதைக் களைந்துவிடப் போகிறார். ஆனால், அப்படிச் செய்யாமல்
பத்திரிகைகளுக்கு அறிக்கைகள் கொடுப்பது ஏன்?

பிரச்னைகளை வளர்க்க வேண்டுமென்பதற்குத்தானே! என்னுடைய கோட்டை என்று இறுமாப்புடன் கூறிவந்த ராமதாஸ§க்கு, விருத்தாச்சலத்தில் ஒரு நடிகர் கொடுத்த அடியிலிருந்து இன்னும் மீளாமல் ஏதோதோ உளறிக் கொண்டு இருக்கிறார். இப்படியெல்லாம் பேசுவது, அறிக்கை விடுவது எல்லாம் ராமதாஸின் தலைக்கனத்தின் அறிகுறி.

ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். அரசியல் தலைவராக டாக்டர் ராமதாஸை எந்தக் காலத்திலும் யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இவருடைய மகன் டாக்டர் அன்புமணி கூட மக்களின் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்படவில்லை. எங்கள் கட்சியிடம் இருந்த ஒரே ஒரு ராஜ்ய சபா சீட்டைக் கூட கலைஞர் அவர் மகனுக்காக விட்டுக் கொடுத்தார். இது எவ்வளவு பெரும்தன்மை! அதையெல்லாம் கொஞ்சமாவது ராமதாஸ் நினைத்துப் பார்த்ததுண்டா?
நானும் ராமதாஸ் மீது நிறைய குற்றச்சாட்டுகளைச் சொல்ல முடியும். எந்த அறிவாளியையும் தன் பக்கத்தில் வைத்துக்கொள்ள ராமதாஸ் விரும்பியதில்லை. பண்ருட்டி ராமச்சந்திரன், பேராசிரியர் தீரன். இவர்களெல்லாம் உதாரணங்கள். ‘ராமதாஸ§க்கு எங்களால் கப்பம் கட்ட முடியவில்லை’ என்று இவர் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர்களே சொல்லியிருக்கிறார்கள்.

இந்த லட்சணத்தில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்காகச் செயல்படுகிற தலைவன் என்றார். இப்படி மோசடியான தலைவர் யாரும் இருக்க முடியாது.
தானே பாண்டிச்சேரி முதல்வர், தானே தமிழ்நாட்டு முதலமைச்சர், தானே இந்தியாவின் பிரதமர் இப்படியெல்லாம் கற்பனை செய்து கொண்டு ராமதாஸ் தூங்குகிறார். எந்த நேரத்தில் யாருக்கு நண்பன், யாருக்கு விரோதி என்று அடையாளம் காணமுடியாத ஒரு நபர் இந்தியாவில் இருக்கிறாரென்றால் அது ராமதாஸ்தான்.

நேருவை, இந்திராவைக் கடந்து வந்தவர் கலைஞர். ஜெயப்பிரகாஷ் நாராயணனைக் காப்பாற்றிய தலைவர். இந்த மாதிரி சின்ன ஆட்களுக்கெல்லாம் அவர் பதில் சொல்லத் தேவையில்லை. ஒரு விஷயத்தை இங்கே சொல்றேன். எங்களை மாதிரி தோற்றவர்களும் யாருமில்லை. எங்களை மாதிரி ஜெயித்தவர்களும் யாரும் இல்லை. உயர்வு, தாழ்வு எல்லாவற்றையும் பார்த்துவிட்டோம். அதனால் இதெல்லாம் எங்களுக்கு சாதாரண விஷயம்.

நொடிக்கு நொடி சுய மரியாதை பேசி வரும் ராமதாஸ், தன்னையும் தன் மகனையும், ஐயா, சின்ன ‘ஐயா’ என்று அழைப்பதைத்தான் விரும்புகிறார். இதையெல்லாம் மாற்றிவிட்டு கலைஞரையும் தி.மு.க.வையும் விமர்சனம் செய்யட்டும். என்னைப் பொறுத்த வரை கூட்டணியில் இருந்து கொண்டு அந்தக் கட்சியையும், ஆட்சியையும் விமர்சனம் செய்யும் ராமதாஸ், ஒரு பிளாக் மெயில் அரசியல்வாதி. தி.மு.க. என்பது ஒரு பனங்காட்டு நரி. அது ராமதாஸ் போன்றவர்களின் சலசலப்புக்கு அஞ்சாது’’ என்று சொல்லி முடிக்கும்போது வெற்றிகொண்டானின் கண்களில் உண்மையான தி.மு.க. தொண்டனின் சீற்றம்.

_ திருவேங்கிமலை சரவணன்

நன்றி குமுதம்...

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Thursday, March 22, 2007

ஆதி திராவிட பெண்கள் - விமான பணிப்பெண்கள் பதவிக்கு...

ஆதி திராவிட பெண்கள் - விமான பணிப்பெண்கள் பதவிக்கு...

கலைஞர் அரசு பல சாதனைகளை தொடர்ந்து செய்து வருகிறது. அதில் இன்று குறிப்பாக "ஆதி திராவிட" மாணவிகள் "விமான பணிப் பெண்ணாக வருவதற்கு வழி வகுக்க கிட்டதட்ட 100 மாணவிகளுக்கு கழக அரசு படிப்பதற்கு / பயிற்சிக்கு 1 லட்சமும் மாதம் ரூபாய் 200 தரவிருக்கிறது. அதன் முதல் காசோலை மற்றும் அனுமதியை தமிழக அமைச்சர் தமிழ் அரசி தருகிறார்.

Free Image Hosting at www.ImageShack.us

தாழ்த்தப்பட்ட, உரிமைகள் மறுக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்கள் இன்று சமூகத்தில் மென் மேலும் உயர கலைஞர் அரசு ஆதரவாக இருப்பது பாராட்டுக்குரியது.

இது நிச்சயம் "பெரியார் அரசுதான்". வாழ்க கலைஞர்!!!

நன்றி

மயிலாடுதுறை சிவா....

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Monday, March 19, 2007

அன்புடன் : கெளதமி - பருத்தி வீரன் கார்த்திக்


நேற்று இரவு சூர்ய தொலைகாட்சியில் கெளதமி நடத்துகின்ற அன்புடன் பார்த்தேன். நேற்று சிறப்புவிருந்தினராக பருத்தி வீரன் கார்த்திக் கலந்துக் கொண்டார். கார்த்திக் மிக கலகலப்பாக நன்குபேசினார். தன்னுடைய பள்ளி பருவம், கல்லூரி பருவம், அமெரிக்காவில் மேல் படிப்பு படித்தது எல்லாவற்றையும் மிக எளிமையாக சிரித்த முகத்துடன் பகிர்ந்துக் கொண்டார். மிக யாதார்த்தமாகபேசுவதும், நல்ல கலகலவென்று சிரிப்பதும் பார்ப்பதற்கு மிக அழகு. கல்லூரியில் படிக்கும் பொழுது நண்பர்கள் எவ்வளவு ஜாலியாக கலகலப்பாக இருப்பது போல் இருந்தது அவரின் பேட்டி.

கார்த்திக் ஓரளவு உயரமாக காணப்பட்டார், சூர்யா போல குள்ளம் இல்லை, சூர்யா போல மொத்தமான உயரமான காலணி அணிந்து வரவில்லை. கார்த்திக் விஜய், அஜீத், விஷால் போல மதுர, திருபாச்சி, சிவகாசி, ஆஞ்சநேயா, வரலாறு, ஆழ்வார், போக்கிரி, தாமிரபரணி போன்ற படங்களை பார்த்து மிகப் பெரிய வீச்சு அருவாள், தூப்பாக்கி, ஊரை அழித்தல், சிட்டி முழுவதையும் தீக்கறை ஆக்குதல் போல பண்ணாமல் இருந்தால் கார்த்திக்கிறகு வளமையான எதிர்காலம் இருக்கிறது என்று நம்பலாம்.

நடிகர் சிவக்குமார் தன்னுடைய இரண்டு பையன்களை நன்றாக வளர்த்து உள்ளார். படித்து முடித்து விட்டு உன் வாழ்க்கையை தேர்ந்து எடு என்றாராம். உண்மையில் சிவக்குமாரை பாராட்ட வேண்டும். உடனே சினிமாவில் கதாநாயகன் ஆக்கி காசு பார்க்க நினைக்காமல் நின்று நிதானமாக பசங்களை ஆளாக்கி உள்ளார். அமெரிக்காவில் இருந்து வேலைக்கு சென்று இருந்தால் BMW வாங்கிடலாம் என நண்பர்கள் சொன்னதை பகிர்ந்துக் கொண்ட பொழுது, அமெரிக்கவாழ் தமிழ் இளைஞர்கள் காரின் மீது உள்ள மோகம் பட்டவர்த்தனமாக தெரிந்தது. ஆனால் கார்த்திக் சினிமா மீது கொண்ட மோகம் காரணமாக அமெரிக்காவில் இருந்து வந்து இயக்குனர் மணிரத்னத்திடம் வேலைப் பார்த்து, தற்பொழுது ஓர் நல்ல கதாநாயகனாக அடி எடுத்து வைத்து இருக்கிறார். நல்ல நல்ல வேடங்களை ஏற்று தமிழ் சினிமாவில் நல்ல தரமான திரைப் படங்களை தரட்டும்.

கெளதமியின் பேச்சு, சிரிப்பு எல்லாமே செயற்கையாக உள்ளது. ஓர் அந்நோன்யம் சுத்தமாக இல்லை. முதல் இரண்டு வாரங்கள் லேப் டாப் வைத்து படுத்திக் கொண்டு இருந்தார். நல்லவேலை இந்த வாரம் முதல் TVயில் காண்பித்துக் கொண்டு இருந்தார், பரவாயில்லை. சூர்யா தொலைக் காட்சியில் ஞாயிறு தோறும் இரவு ஒரு மணி நேரம் கிடைத்ததை கெளதமி நன்றாக பயன் படுத்தி கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் "காப்பி வித் அனு" சூப்பர், "அன்புடன்" தெண்டம் என்று சொல்லி விடுவார்கள்.

மயிலாடுதுறை சிவா...

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

அசத்திய விஜய தி ராஜேந்தர்


சனி இரவு சூர்ய தொலை காட்சியில் அசத்த போவது யாரு? என்ற நிகழ்ச்சியில் விஜய தி ராஜேந்தர் கலந்துக் கொண்டு அசத்தி கலக்கோ கலக்கு என்று கலக்கினார் என்றால் அது மிகையாகது. ஆயிரம் ஆனாலும் மாயுரம் ஆகுமா? என்பதற்கு ஏற்ப ராஜேந்தர் மயிலாடுதுறை
சேர்ந்தவர் என்பதாலும், அவருடைய தன்னம்பிக்கை காரணத்தாலும் அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும். நான் மேல்நிலை பள்ளியில் படித்த காலத்தில் "தி மு க" சார்பாக மேடையில் கலக்கலாக பேசியதை பார்த்து ரசித்து இருக்கிறேன். காலப் போக்கில் அவரின் சில அரசியல் அணுகு முறைகள் பலவற்றில் உடன் படவிட்டாலும் ராஜேந்தர் நான் படித்த கல்லூரியில் படித்தவர், எங்கள் ஊர் காரர் என்பதால் அவர் மீது தனிப் பட்ட முறையில் எந்த வெறுப்பும் இல்லை ஆனால் அவர் மீது ஓர் பாசம். இந்த தேர்தலில் திமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ததும் மன மகிழ்ச்சியே.

சனி அன்று நடந்த நிகழ்ச்சியில் ராஜேந்தரே பலக் குரலில் பேசி காண்பித்ததும், பாடி காண்பித்ததும் மிக அருமை. அசத்தப் போவது யார்? என்ற நிகழ்ச்சியில் வரும் இளைஞர்கள் பலர் பல்வேறு விதத்தில் அசத்துவதும், அவர்கள் அனைவரும் சிறிய நகர மற்றும் கிராமத்தில் இருந்து வந்து இருப்பதும் பாராட்டுக்கு உரியது. இதே குழு விஜய் தொலைக் காட்சியில் "கலக்க போவது யாரு?" செய்ததும், தற்பொழுது சூர்ய தொலைக் காட்சிக்கு செய்வதும் அனைவரும் அறிந்ததே.

இதன் தலைவர் திரு ராஜ்குமார் என்பவரின் அணியில் மிகச் சிறந்த கலைஞர்கள் பலர் பல்வேறு கலைகளில் சிறந்து விளங்குகிறார்கள். ஒவ்வொரு வாரமும் நடனம், பலக் குரல், தனி நடிப்பு, மாறு பட்ட சிந்தனையில் அசத்துகிறார்கள். இந்த நான்கு வாரத்தில் வடிவேலு, சத்யராஜ், சரண் இவர்களுக்கு அடுத்து வந்த தி ராஜேந்தர் கலக்கிவிட்டார். இவரும் அசத்தப் போவது யாரில் வந்த ஓர் நபரும் மாறி மாறி பலக்குரலில் நம்பியார் போல, எம் ஜி ஆர் போல பேசி அசத்தினார்கள். மொத்ததில் விஜய தி ராஜேந்தர் தன்னம்பிக்கையோடு என்னிடம் ஓரளவு சரக்கு இருக்கிறது என்று காண்பித்து கொண்டார். பாராட்டுகள். மதன்பாபும், சிட்டிபாபுவிற்கு பிறகு வேறு யாரைவது போட்டு இருக்கலாம், ரொம்ப அலட்டுகிறார்கள்.
சந்தியா பெண் மிக அழகாக இருக்குகிறார், குரலும் அருமை, ஆனால் தலையை ஆட்டி ஆட்டி கீச் கீச் என்று கத்துவது சற்று போராக உள்ளது.

சாதி வெறி மற்றும் மத வெறிக் கொண்ட, தான் என்ற அகங்காரம் கொண்ட விசுவிற்கு பிறகு அரட்டை அரங்கத்தை "சலாமன் பாப்பையா" மேலும் சொதப்பினார். அவரை விட ஆயிரம் மடங்கு விஜய தி ராஜேந்தர்
நன்றாக செய்கிறார். அரட்டை அரங்கதில் இவர் அதிகம் பேசமால் ஓரளவு நன்றாகதான் இவர் செய்து வருகிறார். திமுகவிற்கு ஆதரவாக இவர் பிரச்சாரம் செய்த காரணத்தாலும், முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினரும்
ராஜேந்தரை சூர்ய தொலைக் காட்சியில் தூக்கிவிடுவதும் பாராட்டுக்கு உரியது.



மயிலாடுதுறை சிவா...

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Tuesday, March 13, 2007

முகவரி திரைப் படம் - ஓர் பார்வை

இந்திய தொலைக் காட்சிகளில் முதன் முறையாக ஒளிப்பரப்ப படும் சூரிய தொலைக் காட்சியில் காண்பிக்கப் படும் திரைப் படங்களை எப்பொழுதும் பார்ப்பது இல்லை. முக்கியமாக வார இறுதியில் அதனைப் பார்க்கவும் தோணாது. ஆனால் இந்த வாரம் ஞாயிறு மாலை துரை இயக்கத்தில் அஜீத் / ஜோதிகா நடித்த "முகவரி" படம் பார்க்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அந்த படத்தை ஏற்கனவே பார்த்து, ரசித்து டிவிடி வாங்கி வைத்து விட்டாலும், மீண்டும் தொலைக் காட்சியில் பார்த்த போதிலும் மனதை வெகுவாக தொட்டப் படம் எனலாம். இப்படி பட்ட தரமான படங்களில் அஜீத் நடித்து தற்பொழுது ஆழ்வார், முன்பு சிட்டிசன், பரமசிவன், வரலாறு போன்ற படங்களில் நடிப்பதும் கொடுமையிலும் கொடுமை!!!

அண்ணன் கதாபாத்திரத்தில் வரும் ரகுவரன், கலக்கலாக நடித்து இருப்பார். இப்படி ஓர் அண்ணனும் இப்படி பட்ட குடும்பமும் நம் சமுதாயத்தில் இருக்க வாய்ப்பு உள்ளதா? என்று ஏக்கமாக உள்ளது. அஜீத் சோர்ந்து போகும் எல்லா சந்தர்ப்பத்திலும் அண்ணன் ரகுவரன் ஆறுதலாக தட்டி கொடுப்பதும், நீ நிச்சயம் ஜெயித்து விடுவாய் என்று சொல்லுகின்ற காட்சி அனைத்தும் மிக அழகாக எடுக்கப் பட்டு இருக்கும். ஓர் கல்யாண வீட்டில் ஜோதிகாவை ரகுவரன் குடும்பம் சந்திக்கின்ற காட்சியில் "உலகம் ரொம்ப சிறுசு
நல்லவங்களை நல்லவங்கள் சந்தித்து தீர வேண்டும்" என்பார். எவ்வளவு அருமையான எளிமையான வசனங்கள்.

ஜோதிகாவிடம் தந்தை ஜெய் கணேஷ், அஜீத்துடன், ஜோதிகா திருமணம் பற்றியும், அவர்கள் எதிர்கால வாழக்கை பற்றியும் பேசுகின்ற காட்சி என்ன அழகாக, ஆழமாக, அருமையாக கோவிலின் மேற் புற பிரகாரத்தில் வைத்து
எடுக்கப் பட்டு இருக்கும். தந்தையாக மிக எதார்த்தமாக அஜீத்திடம், நீங்கள் கிட்டதட்ட 7, 8 ஆண்டுகளாக இசை அமைப்பாளராக ஆக வர முயற்சிப் பண்ணிக் கொண்டு வருகீறீர்கள். இன்னும் 6, 7 ஆண்டுகள் வரை இசை அமைப்பாளாராக வர முடியாமல் போய்விட்டால் என்ன பண்ணுவீர்கள் என்பார். அவர் அருகிலேயே கதாநாயகி ஜோதிகா நின்று மெலிதாக அழுதுக் கொண்டே இருப்பார். அப்பொழுது அஜீத், இது 7, 8 ஆண்டுகள் முயற்சி இல்லை, "7, 8 ஆண்டுகள் தவம்" என்பாரே அங்கு இயக்குனரின் கனவு, வருத்தம், முயற்சி, லட்சியம் நன்கு வெளிப்படுகிறது. அதுமட்டும் அல்ல, அஜீத் இன்னும் 7, 8 ஆண்டுகள் இசை அமைப்பாளாராக ஆக முடியா விட்டாலும் அப்பொழுதும் அதற்குதான் முயற்சி பண்ணி கொண்டே இருப்பேன் என்பார், அதனை கேட்டு விட்டு நொந்து நூலாகி ஜெய் கணேஷ் விலகி சென்று விடுவார். அருகில் உள்ள ஜோதிகா தேம்பி தேம்பி அழுதுக் கொண்டு இருப்பார். அஜீத் என்னை மன்னித்து விடு என்பார், அதற்கு ஜோதிகா உங்களை பற்றி நன்கு எனக்கு தெரியும், உங்களை நான் தவறாக எண்ண மாட்டேன் என்று அவரும் அழுதுக் கொண்டே போய் விடுவார். இந்த காட்சி படத்தில் கிட்டதட்ட 15 நிமிடங்கள் வரும், இந்த காட்சி அமைப்பும் மிக அருமையாக இருக்கும். ஒட்டுமொத்த இந்த காட்சி அமைப்பு ஓர் சாரசரி இளைஞன் வாழ்க்கையில் ஜெயிக்க எப்படி நீண்ட காலம் போராட வேண்டி உள்ளது என்பதும், நல்ல சுயநலம் இல்லா காதலும் எப்படி விட்டு
போகும் எனபதும், மிக தெளிவாக சொல்லப் பட்டுள்ளது.

இப்படி பட்ட அஜீத் அண்ணன் ரகுவரன் நெஞ்சுவலி காரணமாகவும், குடும்ப பொருளாதார சூழ்நிலை காரணமாகவும், மிகப் பெரிய லட்சியத்தை தூக்கி எறிந்து, மிக சதாரண மாத வேலை சம்பளத்திற்கு செல்ல ஆரம்பித்து விடுவார் அஜீத். அப்பொழுது அவரின் நீண்ட நாள் நண்பர் மணிவண்ணன், வாப்பா, போய் ஓர் புது முக இயக்குனரை பார்த்து விட்டு வரலாம் என்பார், அதற்கு அஜீத், வேண்டாண்ணே, இத்தனை பகல் பொழுதுகள், எத்தனை நாட்கள், எத்தனை வருடங்கள் இப்படி காத்து இருப்பது? இதுவரை நான் காத்து இருந்தது போதும் எனவும், "வாழ்க்கையில் வெற்றி முக்கியம், ஆனால் நான் வெற்றி பெற்று விட்டு திரும்பி பார்க்க என் குடும்பம் இருக்காது என்பார்" "ஒருவன் என்னதான் சமுதாயத்தில் வெற்றி அடைந்து விட்டாலும் அவனது தனிப்பட்ட குடும்ப சந்தோஷம் மிக முக்கியம்" என்று அஜீத் சொல்வது, பார்ப்பவர்கள் கண்களை பனிக்க செய்யும், இதயத்தை
ஏதோ ஒன்று அழுத்தும். அப்பொழுது மணிவண்ணன் ஏப்பா இந்த முடிவை அப்பொழுதே எடுத்து இருந்தால் அந்த பெண்ணை திருமணம் செய்து இருக்கலாமே என்பார். அதற்கு அஜீத் அன்றைய சூழ்நிலையில், இசையா? அவளா? என்று கேட்ட பொழுது இசை என்று அன்று தோன்றியது, இன்று இசையா? குடும்பமா? என்ற வருகின்ற பொழுது குடும்பம் என சொல்ல தோணுது அண்ணே என்று சொல்லி அழுது கொண்டு இருப்பார். இதுதான் வாழ்க்கையின் யாதார்த்தமோ?

இயக்குனர் துரை தமிழ் சினிமாவில் மிக கடினப் பட்டு ஜெயித்து இருப்பார் என்று தோன்றுகிறது. கதாநாயகனின் பாத்திர அமைப்பு, அன்பான பண்பான குடும்பம், நல்ல குடும்ப நண்பர்கள் இப்படி பல நல்ல விசயங்களை விரசம்
இல்லாமலும், வன்முறை இல்லாமலும் வைத்து இருப்பது அவர் ஓர் நல்ல இயக்குனாராக பரிமாணம் அளித்தார் இந்த திரைப் படத்தில். இப்படி பட்ட இயக்குனர் துரை ஏன் அடுத்த அடுத்த படங்கள் கொடுக்க முடியவில்லை?
அஜீத் கதாபாத்திரம் இவர்தானோ? இதே இயக்குனர் சிம்புவை வைத்து கிட்டதட்ட 4 ஆண்டுகளுக்கு பிறகு வன்முறை காட்சிகள் நிறைந்த "தொட்டி ஜெயா" என்ற படத்தையும் கொடுத்து, நானும் ஓர் சாரசரியான தற்பொழுது சமூகத்தில் எடுக்கின்ற / ஒடுகின்ற படங்களை எடுப்பவன் என்று சொல்லமல் சொல்லுவிட்டார் என்றே தோன்றுகிறது.

இயக்குனர் துரை "முகவரி" போல ஓர் நல்ல படத்தை மீண்டும் எடுப்பாரா?

மயிலாடுதுறை சிவா...



Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Sunday, March 11, 2007

கனி மொழி - அரசியலுக்கு தேவை...

இது பெண்கள் தினத்திறக்காக மற்றும் நீண்ட நாட்களாக நான் எழுத ஆசைப் பட்ட விசயம்.

மார்ச், 2007. தமிழ் நாட்டு அரசியலை உற்று பார்க்கின்ற பொழுது பெண் அரசியல்வாதிகள் எண்ணிக்கையில் மிக குறைவாகதான் உள்ளார்கள். நம் தமிழ் நாட்டிற்கு ஓர் பெண் முதல்வர் இருந்த பொழுதும்சராசரி பெண்களின் பங்கு மிக தெளிவாக, கொள்கை ரீதியாக, அரசியல் பாடங்கள் கற்றவர்களாக, ஓரளவு நம் சமுதாயத்துடன் ஒத்துப் போக கூடிய கருத்துக்களை உள்வாங்கிய பெண் தலைவர்கள் 33% அளவிற்கு உள்ளதா என்பது ஓர் பெருத்த கேள்வி குறியாக உள்ளது. இந்திய அரசியலில் பெண் தலைவர்களும் சுதந்திர போரட்டத்தில் கூட பங்கு பெற்ற தலைவர்கள் இருந்து இருக்கிறார்கள், ஆனால் அந்த காலத்தில்இருந்த பெண் தலைவர்கள் பலர் துளிக்கூட சுயநலம் இல்லாமல் நாட்டிற்காக சொந்த மண்ணிற்காக போராடி இருக்கிறார்கள் என்பதையும் வரலாற்றில் சில பக்கங்கள் சொல்லதான் செய்கிறது.

அப்படி நான் உற்று நோக்குகின்ற ஓர் நபர் நம் முதல்வர் கலைஞர் அவர்களின் புதல்வி கனிமொழி. முதல்வரின்மகள் என்ற காரணத்திற்காகவே அவரிடம் உள்ள பல நல்ல விசயங்களை நம் பத்திரிக்கைகள் இன்னும் மக்கள் இடத்தில் கொண்டு செல்ல வில்லையோ என்று நான் பல சமயம் நினைத்துப் பார்த்து இருக்கிறேன். கனிமொழி என்ற நபரிடம் நிச்சயம் பாராட்டபட வேண்டிய பல விசயங்கள் இருக்கதான் செய்கிறது. ஓர் சாராசரிபெண்ணாக அவர் கடந்து வந்த பாதையில் ரோஜாக்களை விட முட்களைதான் அதிகம் பார்த்து இருப்பார் என்று நினைக்கிறேன்.


Free Image Hosting at <a href=www.ImageShack.us" />

கனிமொழி என்கிற ஓர் பெண், முதல்வரின் பெண் என்பதால் மாட மாளிகையில், பட்டத்து இளவரசி போலஇல்லாமல் மிக சதாரணமாக எளிமையாக எல்லோரிடமும் பழகும் ஓர் பக்கத்து வீட்டு பெண் என்கிறஉணர்வை ஏற்படுத்துகின்ற தோற்றம் நிச்சயம் அவர்களுக்கு அது மிகப் பெரிய ப்ளஸ் பாயிண்ட் என்றுதான் தோன்றுகிறது.

நம் சமுதாயத்தில் மணவாழ்க்கை என்பது ஓரு தவிர்க்க முடியாத கட்டமைப்பு. சிலருக்கு அல்லது பலருக்குமனமொத்த வாழ்க்கை அமைவது இல்லை. இதற்கு கனிமொழி ஒன்றும் விதிவிலக்கல்ல. முதல் திருமண வாழ்க்கை பாதிக்கப்பட்ட பொழுதும் அதில் இருந்து மீண்டு வந்து மீண்டும் ஓர் நல்ல வாழ்க்கையை அதுவும் மனதிற்கு பிடித்த மற்றோரு வாழ்க்கையை நல்ல படியாக அமைத்துக் கொண்டு ஓர் குழந்தைக்கு தாயாக இருப்பதும் பாராட்ட பட வேண்டிய ஒன்று.

1988 ஆண்டிலே சென்னையில் உள்ள எத்திராஜ் கல்லூரியில் பொருளாதாரம் பயின்ற மாணவியாக இருந்த பொழுது கோவில்களுக்கு சென்று இறைவனை வணங்கி இருக்கிறார், காலப் போக்கில் ஆலயங்களில் இறைவனை தேடுவதை விடஇயல்பு வாழ்க்கையில் நமக்கும் மேலே ஓர் சக்தி உள்ளது என்பதைவிட, நமக்குள்தான் ஓர் சக்தி இருக்கிறது என்பதை உணருகிறேன் என்று கூட விகடனில் வெளிப்படையாக பேசி இருக்கிறார்.

தமிழ் சமுதாயத்தில் அரசியல் தலைவர்களில் மறுக்க முடியாத மறைக்க முடியாத ஓரு மாபெரும் அரசியல் தலைவர் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார். அவருடைய பல புத்தகங்களை தந்தை கலைஞரிடம் இருந்து வாங்கி படித்துமூட நம்பிக்கை, சாதி மறுப்பு, பெண் விடுதலை இவை அனைத்தையும் உள்வாங்கி வைத்து இருப்பதில் இருந்து தன்னுடைய வளர்ச்சியில் அவருக்கு ஓர் சமுதாயம் சார்ந்த அக்கறை இருக்கிறது என்பது தெளிவாக தெரிகிறது.

கலைஞருக்கு தமிழ் இலக்கியத்தில் மிகுந்த ஈடுபாடும் மற்றும் காதலும் உள்ளதை போல அவரது வாரிசு கனிமொழிக்கு உள்ளது என்பது மகிழ்ச்சி குரிய விசயம். குறிப்பாக சங்கத் தமிழை படித்துவிட்டு கலைஞரிடம் விவாதம் செய்வாராம். தமிழ் இலக்கியத்தின்மேல் இப்படி ஓர் காதல் இருப்பதும் நிச்சயம் ரசிக்கப் பட வேண்டிய விசயம். அவர் கலந்து கொள்ளும் விழாகளில் தமிழ்இலக்கியம் பற்றி, பாரதிப் பற்றி, கம்பன் பற்றி, திருவள்ளூவர் பற்றி பேசுவதும் கவனிக்க பட வேண்டிய விசயம்.
தமிழ் நாட்டை பொறுத்தவரை அரசியலுக்கு அப்பாற்பட்டு எல்லோராலும் ஏற்று கொள்ளப்பட்ட ஓர் அறிவார்ந்த, சமுதாயஅக்கறை கொண்ட நபர்களும் ஆதரிக்கும் விசயம் "நம் ஈழ மக்கள் விடுதலை". நம் தாய் மொழி தமிழாக உள்ள பட்சத்தில் நம் மொழி பேசுகின்ற மக்கள் கைக்கு எட்டுகின்ற தூரத்தில் அவர்களின் சொந்த மண்ணிற்கு போராடும் அவல நிலைக்குகுரல் கொடுக்க ஓர் சாரசரி தமிழ் பெண்ணாக கனிமொழி இருப்பதும், பத்திரிக்கைகளில் பேசுவதும், போராட்டத்தில் பங்கு கொள்வதும் அரசியலுக்கு அப்பாற்பட்டு அவரை எப்படி பாராட்டமல் இருக்க முடியும்?

சமீபத்தில் “செஞ்சோலை சிறார்கள்" தீக்கு இறையான பொழுது ஒட்டு மொத்த தமிழர்களும் வேதனை கண்ணீர் வடித்த பொழுதுஅதற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கனிமொழி உடனே தமிழ் உணர்வாளர்கள், பற்றாளர்கள் பலரை தொலைபேசியிலும் நேரிலும் கூப்பிட்டு உண்ணாவிரதம் இருந்ததும், அதனை ஆதரித்து கொஞ்சம் கூட பயம் இல்லாமலும், கூச்சம் இல்லாமலும்ஈழ மக்கள் விடுதலை மிக முக்கியம் என்றும், நம்மை போல அவர்களும் தமிழர்கள் தானே என்று சொன்னதும் பச்சை தமிழச்சியாக கனி மொழி மனதளவில் உயர்ந்து காணபடுகிறார். ஒர் பெண் அதுவும் நடப்பு முதல்வரின் வாரிசு தனி ஆளாகநடு ரோட்டில் ஈழ மக்களுக்கு குரல் கொடுத்த விசயம் போற்றுதலுக்கு உரியது.

எல்லாவற்றிற்க்கும் மேலாக இரண்டு வாரங்கள் முன்பு சென்னையில் “சங்கமம்” என்ற விழா எடுத்துதது எத்தனை பாராட்டினாலும் தகும். கடைக் கோடி தமிழனும் பாராட்டும் விதமாக, சராசரி தமிழனின் பல இசை வடிவங்களை நகரவாழ் மக்களுக்குஎளிமையான முறையில் காட்டிய விதம் மனதார பாராட்டபட வேண்டிய விசயம். சராசரி தமிழனின் அக்கறை இல்லாத மேல் தட்டு மக்களின் டிசம்பர் சீசனைப் பற்றி பாராட்டி எழுதும் பத்திரிக்கைகள் இந்த “சங்கமத்தை” எப்படி பாராட்டும்? அதனை தன்னம் தனி ஆளாக சளைக்கமால் கனிமொழி பத்திரிக்கைகளுக்கு பேட்டி கொடுத்த விதம் உண்மையில் மிக தைரியமான விசயம். இந்த துணிவு நிச்சயம் நம் நாட்டிற்கு தேவை. இதுவே ஓர் உயந்த சாதியில் பிறந்த பெண் செய்து இருந்தால் எத்தனை பத்திரிக்கைகள் பாராட்டி, தலையில் தூக்கி வைத்து பேட்டி எடுத்து பக்கம் பக்கமாக போட்டு இருக்கும்?
இப்படிப்பட்ட கனிமொழி ஏன் அரசியலுக்கு வர கூடாது. கலைஞரின் வாரிசு என்பதனாலேயே எப்படி அவரை ஒதுக்க முடியும்?

- ஓர் பெண்ணிய வாதியாக
- ஒர் கடவுள் மறுப்பாளராக
- ஓர் தீவர தமிழ் இலக்கிய ஆர்வலராக
- ஈழ மக்கள் விடுதலையை விரும்புபவராக
- ஓர் தமிழ் கவிஞராக- நாட்டுப் புற கலைகள் மீது ஈடுபாடு உள்ளவாராக
- ஓர் எழுத்தாளராக
- ஓர் பெரியார்வாதியாக

இவ்வளவு சமுதாயம் சார்ந்து இருக்கும் குணங்கள் கொண்ட ஓர் பெண் ஏன் அரசியலில் ஈடுபட கூடாது? திமுக என்ற பேரியக்கம் லட்சகணக்கான தொண்டர்களை கொண்டது. பெரியாருக்கு பிறகு, அண்ணாவிற்கு பிறகு, கலைஞர் தலைமையில் இந்த இயக்கம் சென்று கொண்டு இருக்கிறது. அந்த இயக்கத்திற்கு புத்தணர்ச்சியாக, பெண் முன்னேற்றத்தை முன் எடுத்த செல்லும் விதமாக, பெண் உரிமைகளை மீட்டு எடுக்க கனிமொழி வந்தால் தவறு இல்லை என்பது என் தாழ்மையான கருத்து.

நன்றி
மயிலாடுதுறை சிவா...

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது