Friday, March 18, 2005

மோடிக்கு விசா மறுப்பு - வாழ்க அமெரிக்க தூதரகம்!!!

இன்று காலை இந்த செய்தியை படித்தவுடன் மனம் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.அமெரிக்க நாட்டின் மீது தனிப்பட்ட முறையில் பல கருத்து வேறு பாடுகள் இருக்கலாம்.ஈராக் போர், உலக வங்கிக்கு புதிய தலைவர் நியமனம், மற்ற நாடுகளின் மீது தேவையற்ற ஆதிக்கம், இன்னும் பல சொல்லலாம், ஆனால் இன்று இந்த செய்தி நல்ல பல உள்ளங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான செய்தி!.

@ இந்தியாவின் அவமான சின்னம்
@ இந்து மத வெறியன்
@ பல இஸ்லாமிய சகோதர்(ரி)களை கொன்று குவித்த இந்திய நாட்டின் இரும்பு மனம் படைத்த கொடுங்கோலன்!!!

இப்படிப் பட்ட ஓர் அற்ப அரசியல்வாதிக்கு விசா மறுக்கப் பட்டு இருப்பது சூப்பர் கண்ணா, சூப்பர்.

இப்படிப்பட்ட கேவலமான இந்து மத வெறியனுக்கு விசா மறுக்கப் பட வேண்டும் என கடுமையாக உழைத்த பல இணைய நண்பர்களுக்கும், பல அமெரிக்க இந்திய நிறுவனங்களுக்கும், பல அமெரிக்க தமிழ் அமைப்புகளுக்கும் எனது மனபூர்வமான வாழ்த்துக்கள்!!!

வாழ்க அமெரிக்க தூதரகம், வளர்க அதன் புகழ்!!!

மயிலாடுதுறை சிவா...





Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Thursday, March 10, 2005

ஊர் பாசம்...

ஊர் பாசம்
அமெரிக்கா.வாசிங்டன். இங்கு நான் வேலைப் பார்க்கும் அலுவலகத்தில் என்னுடைய குழுவில் ஓர் புதிய நண்பர் ஒருவர் சேர்ந்து இருந்து இருக்கிறார். கறுப்பர் இனத்தை சார்ந்தவர். வயது சுமார் 45 இருக்கலாம். அவர் இந்த வேலையில் சேர்ந்து கிட்டதட்ட 5 வாரங்கள் ஆயிற்று. எல்லாவிதமான உதவிகளையும் கணணித் துறையில் நன்கு உதவுகிறார். அவருடைய நல்ல குண நலன்களைப் பற்றி நான் எங்களுடைய மேலாளருக்கு மின் அஞ்சலில் தெரியப் படுத்தினேன். போன வாரம் வெள்ளி மாலை சுமார் 4 மணிக்கு அவரோடுப் பேசிக் கொண்டு இருந்தேன். அப்பொழுது அவர் தன்னுடைய கையில் ஒரு புத்தகம் வைத்து இருந்தார், நான் அவரிடம் பைபிள் படிக்கும் பழக்கம் உண்டா, மகிழ்ச்சி என்றுத் தெரியப் படுத்தினேன். அவர் என்னிடம் இல்லை இது என் வரலாறு புத்தகம் என்றார். அவர் தன்னுடைய ஓய்வு நேரத்தில் பட்ட மேற்படிப்பு படிப்பதாகவும், வரலாற்றை சிறப்புப் பாடமாக் எடுத்துப் படிப்பதாகவும் சொன்னார். நான் அவரிடம் ஏன் நீங்கள் வரலாற்று பாடத்தை படிப்பதாக கேட்டேன். அதற்கு அவர் சொன்ன பதில் என் மனதை தொட்ட விசயம். அதாவது நான் கணனித் துறையில் வேலைப் பார்ப்பது காலத்தின் கட்டாயம், என் வயது 45, என்னுடைய 50 ஆவது வயதில் நான் என் சொந்த நாடான கானா சென்று மீண்டும் அங்கு குடிபுகத் திட்டம், அதுமட்டும் அல்ல, நான் மீண்டும் என் தாய் நாடு சென்று எனக்கு மிகவும் பிடித்த கற்பிக்கும் தொழில் ஆன ஆசிரியர் ஆக விருப்பம் என்றார். ஆகையால் தான் தான் தற்பொழுது எனக்குப் பிடித்த வரலாற்றுத் துறையில் முதுகலைப் படிப்பதாகவும், இன்னும் 3 ஆண்டுகளில் முடித்துவிட்டு கானா செல்லும் நாளை ஆவலுடன் எதிர்ப் பார்க்கிறேன் என்றார். இதை கேட்ட என் மனம் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. அவருடைய வாழும் வாழ்க்கையில் ஓர் அர்த்தம் இருப்பதாகவே என் மனம் நினைக்கிறது. என சக நண்பர்கள் நிறையப் படித்த நண்பர்கள் பலர், பொருளாதாரத்திலும் சிறந்து விளங்கும் பலர், மீண்டும் நம் தாய் நாட்டிற்கு சென்று விடுவதைப் பற்றி பேச ஆரம்பித்தால், சென்னையில் ஒரு கோடி வைத்து ஒன்னும் பண்ணமுடியாது! என்றும் மீண்டும் நம் ஊருக்கு போய் உருப்படியாய் எதுவும் பண்ண முடியாது!!! என்று கேட்கும் போழுது மனம் அடையும் வருத்ததற்கு அளவேயில்லை!!!

அதே வெள்ளி மாலை நல்ல கடுமையான குளிர் மற்றும் பனி, அலுவலகத்தில் இருந்து மாலை வீடு திருப்பும் வழியில் வாழ்க்கை துணைவி, ஏதாவது போகும் வழியில் சாப்பிட வாங்கி போய் விடலாம் என்றார். நான் வேண்டாம் வீட்டில் போய் தோசை சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று சொன்னால், முகத்தை தூக்கி "உம்" என்று வைத்துக் கொண்டு, அடுத்த இரண்டு நாள் சனி மற்றும் ஞாயிறு சாப்பாடு ஏனே என்று கடமைக்கு கிடைக்கும் அதற்கு பயந்து வருத்தப் பட்டு, சரி என்ன வாங்கி போகலாம் என்ற போழுது போகும் வழியில் ஓர் நல்ல சிக்கன் காபாப் கடை உள்ளது அங்கே வாங்கி கொள்லாம் என்று முடிவு எடுக்கபட்டது. நான் அங்கு சென்று சிக்கன் காபாப் இரண்டு தட்டு சொல்லிவிட்டு அந்த கடை நபரிடம் பேச்சுக் கொடுத்தேன். அவர் பெயர் மூனீர். வயது கிட்டதட்ட 30 இருக்க்கலாம். ஆபகானிஸ்தானில் இருந்து வந்து கிட்டதட்ட 11 ஆண்டுக்கள் ஆகிவிட்டதாம். என்ன இந்த ஊர் பிடிக்கிறதா என்றேன். ஓகே என்றார். உங்கள் ஊருக்கு திரும்பிப் போகும் எண்ணம் உள்ளதா என்றேன். (இதுப்போல கேள்வி கடந்த 6 ஆண்டுகளில் குறைந்தது 150 பேரிடம் கேட்டு இருப்பேன்). அவர் நிச்சயமாய் இல்லை என்றார். ஏன் உங்களது பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் எல்லோரையும் நீங்கள் மிஸ் பண்ண வில்லையா என்றே கேட்டேன், அதற்கு அவர் இரண்டு வருடத்திற்கு ஒரு முறை ஊர் சென்று எல்லொரையும் பார்ப்பது வழக்கம், ஆனால் "they won't pay my bills" என்றார். அதற்குள் நான் கேட்டு இருந்த் சிக்கன் வந்துவிட பணத்தை கொடுத்து விட்டு நடையை கட்டினேன்.

அலுவலகத்தில் சக நண்பர் கானா செல்லும் நாளை கனவு காண்கிறேன் என்கிறார். ஆப்கானிஸ்தான் சிக்கன் காபாப் நபர் திருப்பி செல்ல வாய்ப்பே இல்லை என்கிறார். இன்னும் 5 ஆண்டுக்களுள் எத்தனைப் பேரிடம் இதுப் போல் பேச போகிறோனோ...

அன்புடன்
மயிலாடுதுறை சிவா...

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Wednesday, March 02, 2005

Original மதுரை முனியாண்டி விலாஸ்....

நண்பர் நாரயணன் "டீ கடையை" பற்றி அலசி மனதையும் அலசி விட்டார். ஏகப்பட்ட பின்னூட்டங்கள். அதன் பாதிப்பே, என் மயிலாடுதுறை நினைவுகள் உங்கள் பார்வைக்கு...

நான் பிறந்த வளர்ந்து, படித்து, வேலை பார்த்தது எல்லாமே மயிலாடுதுறையில் தான். எனது குடும்பம் சுத்த சைவ குடும்பம். ஆனால் நான் காலப் போக்கில் அசைவ பிரியராக மாறியதை உங்களோடு பகிர்ந்துக் கொள்ளவே ஆசை...

முதன் முதலில் 12 ஆவது படிக்கும் பொழுது முட்டை மற்றும் ஆம்லேட் சாப்பிட ஆரம்பித்தேன். பாழாய்ப் போன நாக்கிற்கு அதுப் பிடித்துவிட்டது. என் அம்மாவிற்கு தெரிந்தால் ரொம்ப வருத்தப் படுவார்கள் என்று நினைத்து அவர்களிடம் சொல்லவே இல்லை. பின் மெதுவாக கல்லூரிப் படிக்கும் காலத்தில் சிக்கன், மட்டன், மீன் வகைகளை நண்பர்களின் தயவில் சாப்பிட ஆரம்பித்தும், பின் நாள் அடைவில் அசைவத்திற்கு ஏங்க ஆரம்பித்த கதை தனிக் கதை...கிட்டதட்ட 9 ஆண்டுகள் அசைவம் வாழ்க்கையோடு ஒன்றற கலந்து விட்டது.

மயிலாடுதுறையில் நிறைய இஸ்லாமிய நண்பர்கள். அவர்கள் வீட்டில் நடக்கும் எந்த நல்ல நிகழ்ச்சிகளுக்கும், ரம்லான், பக்ரீத் போன்ற விழாக்களுக்கும் நாக்கை தொங்கப் போட்டு மட்டன் பிரியாணிக்கும், தாளிச்சாவிற்க்கும் அலைந்த சோகம் உள்ளதே அதை சொல்லி மாளாது. அது எப்படிதான் முஸ்லிம் வீட்டு சமையலுக்கு அப்படி ஓர் மணம் மற்றும் சுவையோ...

மயிலாடுதுறையின் பிரபல கடைகள்: அன்னை மெஸ்(தங்கப்பன் கடை), தட்டி மெஸ், மதுரை முனியாண்டி விலாஸ்...

அன்னை மெஸ்(தங்கப்பன் கடை) : மயிலாடுதுறை ரயிலடியில் உள்ளது. இங்கு கிடைக்கும் புரோட்டாவிற்கும், சிக்கன் சால்னாவிற்கும் ஈடு இணை எதுவும் இல்லை. இரவு நேரங்களில் நிறைய இளைஞர்களும், நகரின் முக்கியப் புள்ளிகளை பலரை காணலாம். ஏதாவது விசேசத் தினம் என்றால் "வான் கோழி பிரியாணி" போடுவார்களே, சூப்பரோ சூப்பர்!!!. கோழி பிரியாணியைவிட "வான்கோழிப் பிரியாணி" செம டேஸ்ட்!!!. அந்தக் கடையில் "அமராவதி சிக்கன்" என்று மற்றொரு வகை உணவு உள்ளது, அதவும் மிகச் சிறப்பாக இருக்கும். மயிலாடுதுறையில் வாழந்துக் கொண்டு, அதுவும் அசைவப் பிரியராக இருந்தால் நிச்சயம் இந்தக் கடையின் சுவையான உணவை ரசித்து இருப்பார்கள்.

தட்டி மெஸ்: மயிலாடுதுறையில் கூரைநாடு என்ற இடத்தில் இந்த கடை உள்ளது. இந்தக் கடை காலை 11.30 மணி முதல் மதியம் 4.30 மணி வரை மட்டுந்தான். மதியம் சுட சுட சாதமும், கோழி குழம்பும், மீன் குழம்பும், மட்டன் குழம்பும் வாழை இலையில் பருமாறுவார்கள். இந்த கடையில் மிகப் பிரதித்தம் சுட சுட மீன்கள் பொரித்து தரப் படும். நல்ல காரமாக, எண்ணெய் நிறைய ஊத்தி, மினு மினு வேண்று நல்ல ரோஸ்டாகவும் அதே சமயத்தில் நன்கு வெந்தும் அந்த மீன் ருசி உள்ளதே, எப்படி வார்த்தையால் சொல்வேன்? சைவக் குடும்பத்தில் பிறந்து இப்படி 25 ஆண்டுகள் வீணாக்கி போனதே என்றே பலமுறை வருந்தி இருக்கிறேன். ..

மதுரை முனியாண்டி விலாஸ்: இந்த கடை பேருந்து நிலையம் அருகில் உள்ளது. பரவாயில்லை ரகம்தான். மேலும் இங்கு இம்பலா, செட்டிநாடு, TPS, அனந்தராமன், இப்படி பலக் கடை இருந்தாலும் அன்னை மெஸ்ஸும், தட்டி மெஸ்ஸுமே சூப்பரோ சூப்பர்.

அண்ணாமலை பழகலைக் கழகத்தில் படித்தப் பொழுது, அங்கு இருந்து சீர்காழி வரும் வழியில் "புத்தூர் செயராமன்" கடை உள்ளதே, அதேப் பற்றி தனிப் பதிவே பதியலாம். பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் படித்துக் கொண்டும், மெஸ்ஸில் சாப்பிட்டுக் கொண்டும் 10கீமீ பயணம் செய்து இந்த கடையில் கிடைக்கும் இரால் மீன்களுக்கு வரும் கூட்டம் உள்ளதே, சொல்லி மாளாது!!! தினமும் மதியம் மட்டுமே கடை, ஆனால் 15 அல்லது 20 நிமிடம் காத்து இருந்துதான் சாப்பிட முடியும். கடைசியாக இந்த கடை முதலாளி பெரிய பாத்திரத்தில் கெட்டியான தயிரை அள்ளி அள்ளிப் போடுவார் பாருங்கள், Chanceஏ இல்லை!!!

நண்பர்களோடு எந்த ஊர்களுக்கு சென்றாலும் அந்த ஊரில் உள்ள நல்ல அசைவ கடைக்களுக்கு செல்லுவது வழக்கம். சீர்காழியில் ஆயர்பாடி மெஸ், சிதம்பரம்த்தில் AA, மூர்த்தி மெஸ், குடந்தையில் பாண்டியன் மெஸ், தஞ்சையில் முனியாண்டி விலாஸ், திருச்சியில் அமாரவதி, மதுரையில் செட்டிநாடு மெஸ், அம்மா மெஸ், சென்னையில் ராயப்பேட்டா பொன்னுச்சாமி, திநகர் விருதுநகர் மெஸ், கோவையில் கெளரி சங்கர் இப்படி வாய் வைக்காத இடங்களே இல்லை எனலாம்...

சமுதாயத்தில் பொருளாதார சூழ்நிலையில் கடினப் படும் பொழுது எதைப் பார்த்தாலும் எங்கும் மனசு, இப்பொழுது நாலு காசு கண்ணில் பார்க்கும் பொழுது, Bread, Donuts, Cereal, Frozen Foods, Sandwitch என்று வாழ்க்கை கழிகிறது.

நல்லப் படியாக மீண்டும் தாய் நாட்டுக்கு சென்று குடியேற வேண்டும் என்கிற வெறி நாளுக்கு நாள் அதிகரிக்க நமது உணவு வகைகளை மீண்டும் எப்போழுதும் போல் சாப்பிட வேண்டும் என்று நினைப்பது தவறா...

திரும்பி நமது தாய்நாட்டிற்கு செல்ல நினைப்பதில் நம் உணவு வகைகளும் ஒரு காரணமா அல்லது பெரும் பங்கு உள்ளதா இல்லையா? என்பதை உங்கள் சிந்தனைக்கே விட்டு விடுகிறேன்...

என்றும் அன்புடன்

மயிலாடுதுறை சிவா...






Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது