Monday, January 23, 2006

இனிய தமிழகம் - பகுதி 1 (சென்னை விஜயம்)

முதலில் என் சென்னை விஜயத்தை பற்றி எழத ஆசை...

சென்னை சென்றவுடன் வலைப்பூ நண்பர்கள் நரேன் மற்றும் ரோசாவசந்த்தை தொலைப் பேசியில்அழைத்து பேசினேன். நான் தி நகரில் தங்கி இருந்தேன். நரேனும், வசந்தும் அங்கு வந்து விட்டார்கள்நான் பார்த்தவுடனே வசந்தையும், நரேனையும் அடையாளம் கண்டு கொண்டேன்.

நரேன் எழுத்துகளை பார்க்கும் பொழுது நான் சுமாராக அவருக்கு வயது 40 இருக்கும் என்று நினைத்துக்கொண்டு இருந்தேன். ஆனால் நரேன் மிக சிறிய வயது உடையவராக இருந்தார். அவருடைய பேச்சு மற்றும் சிந்தனை எல்லாமே ஓர் வித்தியாசமாக பட்டது. மொத்ததில் நல்ல விசயம் உள்ள நபராக இருக்கிறார்.

நண்பர் ரோசாவசந்தைப் பற்றி நான் என்ன சொல்ல முடியும். அவரது எழுத்துகளே பேசும். ஆனால் என்னைபோலவே பலரும் ரோசாவசந்தை அன்றுதான் முதல் முறையாக பார்க்கிறார்கள். எல்லோரிடமும் வசந்த என்றுஅறிமுக படுத்தினால், சாதாரணமாக கேட்டு கொண்ட பலர், ரோசாவசந்த என்றவுடன், தலைவா எப்படி இருகிங்க என்று பலரும் மிக ஆவலோடு ரோசவசந்திடம் பேசி கொண்டு இருந்தார்கள். மொத்ததில்"ரோசாவசந்த்" என்றால் ஓர் சிறப்பு மற்றும் தனி கவனம் அவர் மீது இருப்பதை கண்கூடாக பார்த்தேன். எல்லாவற்றிக்கும் மேலாக வசந்த் பயங்கரமான ஜாலி பார்டி. இரவு 3 மணி நேரம் வசந்துடன் மற்றும் நரேனுடன் நம்மவூர் அரசியல், சினிமா, சற்று இலக்கிய வட்டார மக்கள் இப்படி ஜாலியாக நேரம் போனதே தெரியவில்லை.

நாங்கள் அனைவரும் புத்தக கண்காட்சி சென்று இருந்தோம். பத்ரி, பா.ரா, சொக்கன், எல்.ஏ. ராம், ஆசாத், இகாராஸ் பிரகாஷ், எல்லோரையும் பார்க்கும் அனுபவம் ஏற்பட்டது. புத்தக கண்காட்சியை அவ்வளவாக ரசிக்க முடியவில்லை. முதல் நாளே சென்று விட்டோம். புதிய நண்பர்களை பார்த்த பரபரப்பில் நிறைய கடைகளுக்கு செல்ல முடியவில்லை. நண்பர் ரஜினி ராம்கி ஏனோ வரவில்லை. அவருடன் இருமுறைதொலைப் பேசியில் பேசினேன். அவர்தான் நாம் அனைவரும் கூட வேண்டும் என்றார். சபரி மலைக்கு மாலைபோட்டு மலைக்கு சென்றதால் நண்பர் சுரேஷ் கண்ணனை பார்க்க முடியவில்லை. மனம் சற்று வருத்தப் பட்டது. இகாரஸ் பிரகாஷ் மிக அன்பாக பேசி கொண்டு இருந்தார். அன்று முதல் நாள்தான் பிராமணர்கள் சங்கத்தில்சுஜாதா பேசியதைப் பற்றி பேசி வருத்தப் பட்டு கொண்டு இருந்தோம்.

சென்னையில் சில அரசியல் பிரமுகர்களை பார்க்க நேரிட்டது. சென்னை வழக்கம் போல் பரபரப்பாய் இருந்தது " டோயோட்டா இன்னோவா" வேன் எல்லா அரசியல் தலைவர்களும் வைத்து இருக்கிறார்கள்.

அண்ணா சாலையில் பிரமாண்டமாய் சினிமா பிரபலங்கள் சுவர் ஒட்டி மூலம் தெரிகிறார்கள். அதே போல் மிக அழகு அழகாய் பல விளம்பரங்கள் காட்சி அளிக்கிறது. சென்னையில் எப்பொழுதும் முன்னேற்றம் தெரிந்துக் கொண்டேஇருக்கிறது.

இரவு 10 மணிக்கு கூட மக்கள் ஏதோ மந்திரித்து விட்டது போல "சரவண பவனுக்கு" வருகிறார்கள். வழக்கம் போல் சாப்பாடு அருமை. ஆனால் டாலரில் சம்பாரித்தால்தான் கட்டுபடி ஆகும் போல் உள்ளது.

3 தினங்கள்தான் சென்னையில் இருக்க நேரிட்டது. இன்னும் நிறைய நாட்கள் இருக்க ஆசைதான் ஆனால் விடுமுறைஇல்லாத காரணத்தால் மயிலாடுதுறை செல்ல நேரிட்டது.


அடுத்த பதிவில் என் ஊர் மயிலாடுதுறை பற்றி...

நன்றி
மயிலாடுதுறை சிவா...


Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Thursday, January 19, 2006

இனிய தமிழகம்...

நல்ல படியாக தமிழகப் பயணம் முடிந்தது.

நிச்சயம் 20 நாட்கள் போதாது. குறைந்தது 30 நாட்கள் இருந்தால் நன்றாக இருந்து இருக்கும். என்ன செய்வது அதற்கு மேல் விடுமுறை கிடைக்கவில்லையே.

பார்த்த கேட்ட விசயங்களை நிறைய எழத வேண்டும். புத்தக கண்காட்சி சென்றது, நம் வலைப் பூக்கள் நண்பர்களை சந்தித்தது, காரைக்கால் தாய் தமிழ் பள்ளி பற்றி, நம்மவூர் அரசியல், சினிமா பற்றி, இங்கு வந்து இறங்கியவுடன் வாசிங்டன் தமிழ்ச் சங்க தேர்தல் பரபரப்பு பற்றி எப்படி வரிசையாக சொல்வது என்று யோசிக்கிறேன்.

புதிய பொலிவுடன் தமிழ்மணம் உள்ளது, காசிக்கு பாராட்டுகள்.
நாளை முதல் தினம் ஓர் பதிவாக சின்னதாக போடலாம் என்று உள்ளேன்.
நன்றி

மயிலாடுதுறை சிவா...

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது