100வது பதிவும், 1000 பின்னூட்டங்களும்....

வாசிங்டன். நவம்பர் 2007
வணக்கம். தமிழ் அன்பர்களே. கடந்த 3 மாதங்களாக நிறைய எழுத நினைத்தும், நேரம் இல்லை என்றுபொய் சொல்லமால் முழுக்க முழுக்க சோம்பேறி தனமாக இருந்துதான் முக்கிய காரணம் (சென்னைஆட்டோவில், மது, மாதுவை விட சோம்பேறிதனம் மோசம்) என்று படித்ததாக நினைவு?!
இது என்னுடைய 100வது பதிவு. கடந்த வந்த பாதையில் உருப்படியாக எழுதிய பதிவு கிட்டதட்ட20க்கும் குறைவு. ஆனால் கற்றவை ஏராளம். கிட்டதட்ட 1100 பின்னூட்டங்கள் வந்தன. அதில் சிலவழக்கம் போல் கடுமையாக விமர்சித்து வந்தன. எல்லாம் சுவையான மற்றும் மறக்க
முடியாத அனுபவம்.
கடந்த 3 ஆண்டுகளில் வலைப் பூ மூலம் நல்ல தமிழ் நண்பர்கள் கிடைத்தார்கள் என்றால் அது மிகைஅல்ல. ஒரு சில முகம் தெரியாத (?) விமர்சகர்களும் கிடைத்தார்கள். அவர்களில் சிலர் மயிலாடுதுறையை சேர்ந்தவர்கள் என்பது மேலும் ஓர் இனிப்பான செய்தி!!! வாழ்க மயிலாடுதுறை!!!
ஓய்வு கிடைக்கும் பொழுது தமிழ்மணம் படிக்க ஆரம்பித்த காலம் போய், அன்பு நண்பர் மூக்கு சுந்தர்அன்பு தொல்லையால் மணிகூண்டு என்ற பெயரில் வலைப் பூ ஆரம்பித்து கொஞ்சமாய் கொஞ்சமாய்எழுத ஆரம்பித்து இன்று 100ஐ எட்டியாகிவிட்டது. ஒவ்வோரு முறை ஏதாவது ஓர் புது பதிவு போடும்பொழுதும் இன்னும் நன்றாக எழுத வேண்டும் என்று மனம் சொன்னாலும், நான் நன்றாக எழதவில்லைஎன்றே மனசாட்சி சொல்லி கொண்டே உள்ளது. நன்கு எழுத நிச்சயம் முயற்சிக்க வேண்டும்.
கடந்த 3,4 ஆண்டுகளில் ஏராளமான எண்ணற்ற மனதை தொட கூடிய, சிந்தனை தூண்ட கூடிய, நல்ல பல கருத்து உள்ள கட்டுரைகள், சினிமா செய்திகள், விமர்சனங்கள், அரசியல் விழிப்புணர்வு மிக்க பதிவுகள், தரமான மாற்று கருத்துகள் கொண்ட பதிவுகள் இப்படி ஏராளமாக படித்தேன், படித்துக்கொண்டும் இருக்கிறேன் என்றால், அதற்கு தமிழ் மணத்திற்கு நன்றிகள் பல...
இனிமேல் நிச்சயம் மாதம் 2 அல்லது 3வது பதிவு எழுத வேண்டும் என்றுப் பிரியப் படுகிறேன். அடுத்த மாதம் தமிழகம் செல்லுகிறேன், மேலும் பல புதிய செய்திகளை எழுத வேண்டும் என்று ஆசை! குறிப்பாக என் பிறந்த மண் 'மயிலாடுதுறைப்' பற்றி நிறைய எழுதப் பிரியப் படுகிறேன்.
சீக்கரம் நல்ல தகவல்களோடு உங்களை சந்திக்கிறேன்.... இதுவரை என்னை வாழ்த்திய மற்றும் தொடர்ந்து விமர்சனம் செய்யும் என் நண்பர்களுக்கும் நன்றிகள் உரித்தாகட்டும்!!!
நன்றி
மயிலாடுதுறை சிவா....