Monday, April 21, 2008

Chandini Bar - நெஞ்சை உருக்கும் நடிகை தபுவின் ஹிந்தி திரைப் படம் - 2

Atul தன்னுடைய கடந்த காலத்தில் செய்த தவறுகளுக்கு, போலிஸ் அவனை என்கவுண்டரில் போட்டுதள்ளுகிறது. இங்குதான் மும்தாஜின் வாழ்க்கை சீர் குலைந்து போக ஆரம்பிக்கிறது. எந்த மனிதர்கள் அவள் கணவனுக்கு பயந்து பண உதவி செய்தார்களோ, அவர்களே பின்னால் அவளுக்கு எந்த பண உதவியும்செய்யமால் நிராகரிகிறார்கள். குழந்தைகளின் எதிர்காலம் கருதி அவள் மீண்டும் "சாந்தினி பாரில்"நடனப் பெண்ணாகிறாள். தன் மகனையும் மகளையும் எந்தத் தீயச் சக்திகளும் தீண்டிவிடாமல், அவர்களைக் கண்களில் வைத்து, நன்றாகப் படிக்கவைக்கிறாள்.


மும்தாஜின் 16 வயது மகன் ஓரு நாள் கிரிகெட் ஆடசெல்லும் பொழுது, அவனது நண்பர்களின் தவறுக்காகஅவனையும் காவல்துறை அழைத்துச் செல்லுகிறது. போதாக் குறைக்கு அவனது அப்பா பழைய அடியாள்என்பதாலும், காவல்துறை அவனை வெளியே விட மறுக்கிறது. மும்தாஜ் தனது நண்பரின் உதவியோடுஅவனை வெளியே எடுக்க ஓர் அரசியல் பிரபலம் ஒரு லட்சம் கேட்கிறார், சிறிய பையன் என்பதால்ரூபாய் 75,000 ஒத்துக் கொள்ளுகிறார். ஆனால் மும்தாஜிடம் வெறும் 25,000 மட்டுமே இருக்கிறது.






கதையில் இந்த காட்சிதான் என் மனதை மிக மிக ஆழமாக பாதித்தது. மேற் கொண்டு பணத்திற்கு என்ன பண்ணுவது என்று மும்தாஜ் தவித்துக்க் கொண்டு இருக்கையில் மும்தாஜின் மகளை நீ போய்படி இங்கே நிற்காதே என்றுச் சொல்லிவிட்டு, தன் குடும்ப நண்பரிடம் (அவர் 'மாமா' வேலை பார்ப்பவர்) (Rajpal Yadav) பணத்தை எண்ணிக் கொண்டும், பற்றாகுறை காரணமாக அழுதுக் கொண்டு இருக்கும்பொழுது, அவள் நடனம் ஆடிய "சாந்தினி பாரின்" உரிமையாளரிடம் உதவி கேட்பாள், அவரும் மறுத்துவிட அந்த நண்பர் மும்தாஜிடம் தயங்கி தயங்கி பழைய வாடிக்கையாளர்களை கூப்பிட்டு பேசிப் பார்க்கவா? என்று கேட்கவும், அதற்கு மும்தாஜ் அமோதிப்பதுப் போல் அமைதியாக உட்கார்ந்து இருப்பதும், பழைய வாடிக்கையாளர் ஒருவர் மும்தாஜ் வயதானவாள், வேறு புதிய சரக்கை தா என்று சொல்லுவதும், இன்னோரு வாடிக்கையாளர் என்ன மும்தாஜ் அப்படிப் பட்ட பெண்ணா? எவ்வளவு நாளாக தொழில் செய்கிறாள் என்றும், இவர்கள் ரூபாய் 8000 கேட்கவும் அந்த மார்வாடி வாடிக்கையாளர் ரூபாய் 5000 தான் தர முடியும் என்று கறாராக சொல்ல, மும்தாஜ் பரவாயில்லை ஒத்துக் கொள் என்று சைகை காண்பிப்பதும் மனக் கண்களை விட்டு நீங்கா காட்சிகள்! இதில் என்ன கொடுமை என்றால் இவை அனைத்தையும் அவள் மகள் கேட்டு கொண்டு இருப்பாள். கணவனை தவிர வேறு யாரிடமும் தொழில்ரீதியாக மும்தாஜ் சென்றதில்லை, மகனை சிறையில் இருந்து மீட்க அவள் தன்னை பிறரிடம் பணத்திற்காக விற்பதாகக் காட்டுவது பரிதாபத்திலும் பரிதாபம்! அம்மா மும்தாஜ் படும் பணச் சிரமங்களை காண சகிக்காமல் மகளும் அதே சாந்தினி பாரில் போய் நடன்ப் பெண்ணாக ஆடுவதும், அங்கு ஓர் வயதான ஆளிடம் தன்னை விற்று பணம் வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்து தன் அம்மாவின் கைகளில் பணத்தைக் கொடுத்துவிட்டு கதறி அழுவது கொடுமையிலும் கொடுமை.


வெள்ளி அன்று சிறை சென்ற மகன், திங்கள் அன்று அந்த அரசியல் பிரபலம் மூலம் மீட்கப் படுகிறான், அந்த இரண்டு தினத்திற்குள் சிறையில் மும்தாஜின் மகன் இரு இளைஞர்களால் வண்புணர்ச்சிக்கு ஆளாகிறான். இரண்டு தினத்தில் அவனின் வாழ்க்கை தலைகீழாக மாறிவிடுகிறது. சிறையில் இருந்து மீண்டு வந்ததும், அவன் வண்புணர்ச்சிக்கு ஆளானாதை எண்ணி வருத்தப் பட்டு கொண்டே இருக்கிறான். மும்தாஜ் அவனை நன்கு படி எனவும், நல்ல வேலைக்கு செல்லலாம் எனவும் சொல்வதை காதில் வாங்காமல், தீடீரென்று கோபமாக எழுந்து கடைவீதிக்கு செல்லுகிறான். மும்தாஜும் அவனை பின் தொடருகிறாள். கடைவீதியில் அவனை வண்புணர்ச்சிக்கு ஆளாக்கிய இருவரையும் துப்பாக்கியால் சுட்டுக் கொள்கிறான். அதனை பார்த்த மும்தாஜ் அப்படியே தலையில் கைவைத்துக் கொண்டு கதறி கதறி அழுகிறாள்.
வாழ்நாள் முழுவதும் எது நடக்க கூடாது என்று மகனையும், மகளையும் பார்த்து பார்த்து வளர்த்தும் சந்தர்ப்ப சூழ்நிலைக் காரணமாக மகள் விலை மாது ஆகிவிட்டாள், மகன் கொலைக் காரன் ஆகிவிட்டான், மும்தாஜ் எந்தவித தனித் தன்மையும் இல்லாமல் மீண்டும் நடனப் பெண்ணாகவே வாழ்க்கையை தொடருகிறாள் என்று சோகமான கதையை முடிக்கிறார் இயக்குனர்.


தான் கடந்த பாதையில் கசப்பான அனுபவம் காரணமாகவும், தன் கணவனின் நிழல் உலக அனுபவம் காரணமாகவும், தப்பி தவறி கூட இந்த பாதிப்புகள் தன் குழந்தைகள் மீது வர கூடாது என்பதில் கவனமாக இருந்து அவர்களை வளர்த்து ஆளாக்கினாலும், காலமும், அவர்கள் சூழ்நிலையும் மீண்டும் பழைய வாழ்க்கையிலேயே மும்தாஜை தள்ளுகிறது. இதனை இயக்குனார் காட்சிக்கு காட்சி சிறப்பாக கையாண்டுள்ளார். இயக்குனர் நினைத்து இருந்தால் மகனையும், மகளையும் நன்கு படித்து ஆளாவதைப் போல காண்பித்து இருக்கலாம், ஆனால் யதார்த்த உண்மையை மறைக்க தயாராக இல்லை இயக்குனர்.



இப்படி ஓர் பாத்திரத்தில் எப்படி தபுவால் நடிக்க முடிந்தது?. பாரில் நடனப் பெண்ணாக, விலைமாதுவாக, பாசம்மிக்க தாயாக படம் முழுக்க ஓர் மென் சோகத்தோடு வாழ்ந்து இருக்கிறார். இந்த திரைப் படம் பம்பாயில் நிறையை விருதுகளைப் பெற்று இருக்கிறது. இத் திரைப் படத்தின் ஆரம்பித்திலேயே இது பாரில் நடனப் பெண்களைப் பற்றிய படம் என்றும், அவர்கள் வாழ்க்கையில் இன்னோரு பக்கம் என்றும், அவர்கள் வயிற்று பிழைப்பிற்காக பாரில் நடனம் ஆடுவதற்கு தலைவணங்குவதாக ஆரம்பித்திலியே இயக்குனர் சொல்லிவிடுகிறார். அவர்களின் பின்னால் இருக்கும் வேதனைகளை, துயரங்களை, துல்லியமாக பதிவு செய்து இருக்கிறார் Madhur. ஹிந்தியில் தவிர்க்க முடியாத படம் இது. தபுவிற்காக இந்த படத்தை தாரளமாக பார்க்கலாம்.


நன்றி

மயிலாடுதுறை சிவா...




Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Chandini Bar - நெஞ்சை உருக்கும் நடிகை தபுவின் ஹிந்தி திரைப் படம் - 1

சிலப் படங்களை பார்த்தவுடன், நிறைய எண்ண அலைகள் ஏற்படும் - அந்தத் திரைப் படம்குறித்தும் அதில் உள்ள கதாபாத்திரங்கள் குறித்தும், அது உங்களை பாதித்த படமாக இருப்பின்.(இதில் பில்லா, அழகிய தமிழ் மகன், மலைக் கோட்டை, பீமா, காளை இவற்றை எல்லாம் எடுத்து கொள்ளதீர்கள் ப்ளீஸ்!)

கடந்த ஒரு வருட காலமாக ஹிந்தித் திரைப் படங்களை நிறைய பார்க்க ஆரம்பித்து ரசிக்க ஆரம்பித்த விட்டேன், அதிலும் குறிப்பாக இங்கு அமெரிக்காவில் இந்திய மளிகைக்கடைகளில் Art Movie பகுதியில் ஹிந்தியில் மிகச் சிறப்பாக பேசப் பட்ட படங்கள்பார்க்க ஆரம்பித்து வார இறுதிகள் நல்ல பொழுதாக போக ஆரம்பித்து விட்டன. நேரம்கிடைக்கும் பொழுது நிறையப் படங்களைப் பற்றி நான் எழுதுகிறேன்.


அப்படி என்னை மிகவும் பாதித்த படங்களில் ஒன்றுதான் "Chandini Bar". இந்தத் திரைப் படத்தை இயக்கியவர் Madhur Bhandarkar. இவர் ஹிந்தியில் மிக பிரபலமான இயக்குனர்.இவரின் Page 3, Corporate, Traffic Signal என்ற படங்கள் பேசப் பட்ட படங்கள். 'சாந்தினி பார்' திரைப்படத்தைப் பார்த்து முடித்தவுடன், ஓரு சோகமான நாவலைப் படித்தது போல உணர்ந்தேன். இந்த கதையில் என் உணர்வில், என் சிந்தனையில் எண்ண அலைகளை ஏற்படுத்தியது கதாநாயகி தபுவின் நடிப்பு!. இந்த திரைப் படம் தபுவிற்கு ஓர் மைல் கல் என்றால் அது மிகை அல்ல. கதை ஆரம்பம் முதல் இறுதிவரை மும்தாஜ் என்கிற கதாபாத்திரத்தில் தபு வாழ்ந்து இருகிறார். பாரில்(Bar) நடனமாடிக்கொண்டு, விபச்சாரத்திலும் சூழ்நிலை காரணமாக தள்ளப்படும் பெண்களைப் பற்றிய ஒரு திரைப்படத்தில் தபு நாயகியாக நடிக்க ஒப்புக் கொண்டதை நினைக்கும் பொழுது பிரமிப்பாக உள்ளது. தபு தான் ஓரு சிறந்த நடிகை என்பதை காட்சிக்கு காட்சிநிரூபித்திருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும்.

உத்திரபிரதேச மாநிலத்தில் மதக் கலவரம் காரணமாக கதையின் நாயகி மும்தாஜ் தன்னுடையஅப்பா, அம்மா, வீடு எல்லாவற்றையும் இழக்கிறாள். பிழைப்புத் தேடி மாமாவோடு பம்பாய் நகரம்செல்லுகிறாள். தூரத்து உறவினரின் உதவியால், அங்கு அவளுக்கு Chandini Bar என்று சொல்லப்படும் பொழுதுப் போக்கு விடுதியில் நடனப் பெண்ணாக வேலைக் கிடைக்கிறது. விருப்பமே இல்லாமல் அங்கு நடனப்பெண்ணாக வேலைச் சேர்கிறாள் மும்தாஜ். அங்குள்ள மற்ற நடனப் பெண்கள் தங்களை பிழைப்பிற்காக உடம்பை விற்றாலும், அவர்களுக்கும் ஓர் நல்ல மனது உள்ளது என்று இயக்குனர் காண்பித்துஇருப்பது மிக அருமை! மும்தாஜிற்கு அங்குள்ள நடனப் பெண்களே ஒரே ஆறுதல், நட்பு மற்றும்மகிழ்ச்சி எல்லாம்!


மும்தாஜ் ஒருநாள் தன் மாமாவினால் வண்புணரப்படுகிறாள். அடுத்தநாள் தன் சக நடன தோழிகளிடம் அதனைச் சொல்லி அழும் பொழுது, அந்த தோழிகள் ஓவ்வோருக்கும் பின்னாடியும் இதுப் போல் ஓர் கசப்பான அனுபவம் இருப்பது தெரிய வருகிறது. இப்படியே காலங்கள் சென்று கொண்டு இருக்க, அந்த நடன விடுதிக்கு கதையின் நாயகன் Atul Kulkarni வருகிறான், தபுவை பிடித்துப் போய்விடுகிறது. அவன் ஒரு தாதாவுக்கு பணிபுரியும் பேட்டை ரவுடி. மும்தாஜை வலுகட்டாயமாய் தன் ஆசைக்கு இணங்கச் சொல்லுகிறான். மும்தாஜும் எந்த உணர்ச்சியும் இல்லாமல் மரகட்டைப் போல அவனிடம் படுக்க, அவன் கடுப்பாகி, இதற்குமுன்யாருடனும் படுத்தது இல்லையா எனவும், இந்த அனுபவம் உனக்கு இருக்கா என்றும் கோபமாககேட்கும் பொழுது தனது மாமா தன்னை பலாத்காரம் செய்த விசயத்தை சொல்லி தபு அழ, Atul அந்த மாமாவை கத்தியால் குத்தி கொலை செய்கிறான். அதனை மும்தாஜ் அதிர்ச்சியுடன்பார்த்து கொண்டிருக்க, உன்னை போய் உன் சொந்த ஊரில் விட்டுவிடவா அல்லது என்னை திருமணம் செய்து கொள்கிறாயா? என்று கேட்கிறான். அவளும் அவனை திருமணம் செய்துகொள்கிறாள். பாரில் நடனம்பெண் வேலையை விட்டு விட்டு மகிழ்ச்சியாக, கெளரவமாக குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டு இரண்டு குழந்தைகளுக்குத் தாயாகிறாள். காலங்கள் உருண்டொடுகிறது. Atul தன்னுடைய கடந்த காலத்தில் செய்த தவறுகளுக்கு, போலிஸ் அவனை என்கவுண்டரில் போட்டுதள்ளுகிறது. இங்குதான் மும்தாஜின் வாழ்க்கை சீர் குலைந்து போக ஆரம்பிக்கிறது....


தொடரும்....


நன்றி


மயிலாடுதுறை சிவா...

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Tuesday, April 15, 2008

வாழ்த்துக்கள் திருநங்கை வித்யா!

உதவி இயக்குனரானார் அரவாணி

வழக்கமாக சினிமாக்களில் அரவாணிகளை ஒரு கேலிப் பொருளாக சித்தரிப்பது தான் வழக்கம். ஆனால், அந்த சினிமாவிலேயே ஒரு அரவாணியை உதவி இயக்குனராக சேர்த்துக்கொண்டிருக்கிறார் இயக்குனர் டி.சி.சிவக்குமார்.

வித்யா என்ற இந்த திருநங்கை ஒரு எழுத்தாளரும்கூட. இணையதளத்தில் 'பருத்தி வீரன்', 'பச்சைக்கிளி முத்துச்சரம்' போன்ற படங்கள் பற்றிய இவரது விமர்சனம் இணையதள எழுத்தாளர்கள் இடையே ரொம்பவும் பிரபலம்.
சிவக்குமார் இயக்கும் 'பால்' என்ற படம் திருநங்கைகள் பற்றியது. இந்த படத்தில் ரொம்பவே ஆர்வத்துடன் பணிபுரிந்து கொண்டிருக்கிறார் வித்யா.


நன்றி : (மூலம் - வெப்துனியா) : யாஹு தமிழ்!

வாழ்த்துக்கள் வித்யா! உங்களது முயற்சி வெற்றி அடையுட்டும். இந்த திரைப் படம் சமுதாயத்தில் ஓர் தாக்கத்தை உண்டாக்கட்டும்! விருதுகள் பல வெல்லட்டும்! நன்றிகள் பல இயக்குனர் டி.சி.சிவக்குமார்!!!

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்.

நன்றி

மயிலாடுதுறை சிவா...

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Monday, April 14, 2008

மயிலாடுதுறை ஆசிரியை ஜெயசீதா

வாசிங்டன். ஏப்ரல் 2008

ஆசிரியர் தொழில் ஓரு புனிதமான தொழில். நாம் கடந்த வந்த பள்ளி மற்றும் கல்லூரி காலங்களில் சில ஆசிரியர் மற்றும் ஆசிரியைகளை நிச்சயம் நம்மால் என்றும் மறக்க முடியாது. அப்படி ஓரு மறக்க முடியாத மற்றோரு ஆசிரியர் ஜெயசீதா கணக்குப் பாடம் சொல்லி கொடுக்கும் தன்னலமற்ற ஓரு ஆசிரியர் இவர்.

மயிலாடுதுறையில் உள்ள தி.ப.ர.அர. தேசிய மேல்நிலைப் பள்ளியில் வேலைப் பார்க்கும் ஆசிரியர் இவர். பள்ளி காலங்களில் நான் இவரிடம் நான் படிக்கவில்லை. பள்ளி வாழ்க்கை முடித்து அவஅகல்லூரியில் இளங்கலை கணிதம் படிக்கும் பொழுது என் நண்பர்கள் சிலர் அந்த ஆசிரியையிடம் மாலை வேளைகளில் சிறப்புப் பாடம் டீயுசன் படிந்தார்கள், பிறகு நானும் சேர்ந்தேன். மிகப் பொறுமையாக, அன்பாக நடந்தும் ஆசிரியை. அதுமட்டும் அல்ல, கோபமே பட மாட்டார்கள்.

இவர்கள் ஏனோ திருமணம் செய்து கொள்ளவில்லை. ஏன் என்றும் தெரியவில்லை. இப்படிபட்ட சில ஜீவன்கள் திருமணம் செய்துக் கொள்ளமால் இருப்பது கூட நம் சமுதாயத்திற்கு நல்லதோ என்று கூட எனக்கு அடிக்கடி தோணும். இவரைப் பற்றி நான் எழுத இரண்டு காரணங்கள் உண்டு. இன்று தற்செயலாக ஓர் புதிய வலைத் தளத்தைப் பார்த்தேன். http://eenippadikal.blogspot.com/ இந்த வலைப் பூவை எழுதி உள்ளர்கள் நான் படித்த அதே பள்ளியில் படித்த மாணவர்கள். அதில் அவர்களை வாழ்த்தி பின்னூட்டம் தரமுடியவில்லை. உடன் நான் படித்த பள்ளி நினைவிற்கு வருகையில் அந்த ஆசிரியரின் நினைவு வந்தது.

இரண்டாவது ஓர் முக்கிய காரணம், நாங்கள் இளங்கலை கணிதம் படித்தப் பொழுது அவரிடம்ஓர் மூன்று அல்லது நான்கு மாதங்கள் படித்து விட்டு, தேர்வுகளில் நல்ல மதிப் பெண்கள் எடுக்கவில்லை.அதற்கு முழு காரணம் நாங்களே மற்றும் தேர்வும் மிக கடுமையாக இருந்தது. நாங்கள் நல்ல மதிப் பெண் எடுக்காத காரணத்தால் ஜெயசீதா ஆசிரியை எங்களிடம் பணம் பெற்றுக் கொள்ளவில்லை.நாங்கள் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவர்கள் எங்களிடம் பணம் பெற்றுக் கொள்ள மறுத்துவிட்டார்கள்! கணிதம் படித்த ஆண்டு 1988, அன்று ரூபாய் 200 மிகப் பெரியப் பணம், அதுவும்கிட்டதட்ட 5 நபர்களிடம். எவ்வளவுப் பெரிய மனம் வேண்டும் அவர்களுக்கு! சுயநலமில்லா, பொருளின் மீது பற்று இல்லா ஓர் ஜீவன்!

தமிழகம் செல்லும் பொழுது எல்லாம் பள்ளிக்கு செல்லும் வாய்ப்பு ஏற்படும் பொழுது அந்த ஆசிரியை பார்ப்பது வழக்கம், இன்றும் அதே அன்புடன், அதே புன்னகையுடன், சற்று வயதான தோற்றத்துடன் ஜெயசீதா....வாழ்க பல்லாண்டு!

பயன்தூக்கார் செய்த உதவி நயன் தூக்கின்
நன்மை கடலின் பெரிது.


நன்றி
மயிலாடுதுறை சிவா...

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது